சென்னை, ஜூலை 29 - தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும் என்று கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனை வெள்ளியன்று (ஜூலை 28) தலைமை செயலகத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் தி. தமிழரசு, பொதுச் செயலாளர் இ.சர்வேசன் ஆகியோர் சந்தித்து பேசி னர். அப்போது, நகர கூட்டு றவு வங்கிகளை மாவட்ட அளவில் இணைத்து பலப்படுத்த வேண்டும் என்று கோரினர். நகர மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு விரைந்து வழங்க வேண்டும். அனைத்து மத்திய நகர வங்கி ஊழி யர்களுக்கு கடந்த ஆட்சி யில் வழங்கப்பட்ட ஊதிய உயர்வு விழுக்காட்டிற்கு குறையாமல் வழங்க வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்புபடி ஊழியர்களின் முதுநிலை பட்டியல் வெளியிட வேண்டும். மாவட்ட மத்திய கூட்டு றவு வங்கி ஊழியர்களுக்கு வழங்குவது போல நகர கூட்டுறவு வங்கி ஊழியர் களுக்கும் கருணை ஓய்வூதி யம் வழங்க வேண்டும். மாவட்ட மாறுதல் கோரிய வர்களுக்கு விரைந்து பணி மாறுதல் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளையும் வலியுறுத்தி னர். அதற்கு பதிலளித்த அமைச்சர், துறை அதி காரிகளுடன் கலந்து பேசி விரைவில் நல்ல முடிவினை தெரிவிப்பதாக கூறினார். இந்த நிகழ்வின்போது, சம்மேளன நிர்வாகிகள் ஆர். துரைராஜ், எம்.ராஜ கேசி மற்றும் கே .ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.