சென்னை,பிப்.19- “ஆடை என்பது அவரவர் விருப்பம்” என்று மதுரை ஹிஜாப் பிரச்சனை குறித்து தமிழக தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித் துள்ளார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக ளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் பிப்.19 அன்று நடைபெற்றது. காலை 9 மணி நிலவரம் குறித்து தேர்தல் ஆணை யர் பழனிக்குமார் செய்தியா ளர்களுக்கு பேட்டியளித் தார். அப்போது, மதுரை மேலூர் வாக்குச்சாவடி ஒன்றில், `ஹிஜாப் அணிந்து வந்த பெண் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக முகவர் ஒருவர் கலட்டா செய்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த தேர் தல் ஆணையர், “வாக்குப் பதிவுக்கு என்ன ஆடை அணிந்து வர வேண்டும் என்பது அவரவர் விருப்பம். அதில் யாரும் தலையிட முடி யாது. சம்பந்தப்பட்ட பாஜக முகவர் அப்புறப்படுத் தப்பட்டு அக்கட்சி சார்பில் வேறு ஒருவர் முகவராக அமர்த்தப்பட்டுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சிய ரிடம் அறிக்கை கோரப் பட்டுள்ளது” என்றார்.