பெங்களுரிலிருந்து 55 பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பேருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது செங்கம் வனத்துறை அலுவலகம் அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர் மீது ஏறி நின்றது. இதில் 15 பயணிகள் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.