tamilnadu

போக்குவரத்து ஊழியர்; ஓய்வுபெற்றோர் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண்க: சிஐடியு

சென்னை,டிச.31- சிஐடியு அரசுப்போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், பொதுச்செயலாளர் கே. ஆறுமுக நயினார் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் கடந்த 31.8.2023ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.  1.9.2023ஆம் தேதி முதல் ஊதிய ஒப்பந்தம் அமலுக்கு வரவேண்டும்.  கடந்த ஊதிய ஒப்பந்தமும் உரிய காலத்தில் பேசப்படவில்லை.  ஒப்பந்த காலம் முடிவடையும் நிலை யில்தான் பேசப்பட்டது.  கோரிக்கை கள் சம்பந்தமாகப் பேசி ஒப்பந்தம் உருவாக்கும்போது, நீண்டகால நடைமுறையை மாற்றி ஒப்பந்த காலம் 4 ஆண்டாக மாற்றப்பட்டது.  அந்த ஒப்பந்தம் 31.8.2023ஆம் தேதி யுடன் முடிவடைந்துவிட்டது.  புதிய ஒப்பந்தத்தை உருவாக்க அரசு உரு ப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், தொடர் போராட்டங்களுக்குப் பின் கடந்த 2024 ஆகஸ்டு 27ஆம் தேதி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு அனுப்பப் பட்டது.  அன்றைய பேச்சு வார்த்தையில் சங்கங்களை முறைப் படுத்த வலியுறுத்தினோம்.  அரசு எவ்வித முடிவையும் அறிவிக்கா மல் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப் பட்டது.  பேச்சுவார்த்தைக்கான அடுத்த தேதி எப்போது என கோரிய நிலையில்,  எவ்வித பதி லும் சொல்லவில்லை.  ஆகஸ்டு 27ஆம் தேதிக்குப் பின் 4 மாதம் கழித்து டிசம்பர் 27ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு வந்தது. தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு சென்ற நிலையில், முன்னாள் பிரதமர்  மன் மோகன்சிங் மரணம் காரணமாக ஒரு வாரம் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப் படுவதாக கூறி பேச்சுவார்த்தை இல்லை என அறிவிக்கப்பட்டது. அரசின் அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது உரிய காலத்தில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டிய அரசு, தொடர்ந்து காலதாமதம் செய்வது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடி யாது.  முன்னாள் பிரதமர் மரணம் காரணமாக பேச்சுவார்த்தையை ஒத்திவைத்ததை சிஐடியு ஆட்சே பிக்கவில்லை.  10 ஆண்டுகள் பிரதம ராக இருந்த  மன்மோகன்சிங் அவர் களுக்கு தொழிற்சங்கங்கள் கூடி அன்றைய தினம் அஞ்சலி கூட்டம் நடத்தினோம்.  ஆனால், முன்னாள் பிரதமரின் மரணத்திற்கு ஒரு வாரம்  துக்கம் என அறிவித்த அரசு,  போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய பேச்சுவார்த்தையைத் தவிர  மற்ற அரசு நிகழ்ச்சிகள், விழாக் களை நடத்தி வருகிறது.  இதில் முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்று வரு கின்றனர்.  அரசு ஊதிய பேச்சு வார்த்தையை காலதாமதப்படுத்த டாக்டர். மன்மோகன்சிங்கின் மர ணத்தை அரசு பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகத்தைத்தான் தொழி லாளர்கள் மத்தியில் உருவாக்கி யுள்ளது.  ஒத்திவைக்கப்பட்ட பேச்சு வார்த்தை எப்போது நடை பெறும் என்பதையும் இதுவரை  அறிவிக்கவில்லை.  எனவே, உட னடியாக பேச்சுவார்த்தைக்கான தே தியை அரசு அறிவிக்க வேண்டும். திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்துக! நடைபெறும் பேச்சுவார்த்தை யில் நீண்டகாலமாக தீர்க்கப்படா மல் இருக்கும் பணியில் உள்ள, ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும்.  குறிப்பாக, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவது, நிலுவையில் இருக்கும் ஓய்வுகால பலன்களை உடனடியாக வழங்குவதுடன், ஒப்ப ந்தத்தை ஜனவரி இறுதிக்குள் பேசி முடிக்க வேண்டும்.  பிப்ரவரி மாதம் புதிய ஒப்பந்தம் அமல்படுத்த வேண்டும்.  1.9.2023ஆம் தேதியில்  இருந்து முழுமையாக ஒப்பந்த நிலு வைத்தொகையை வழங்கவேண் டும்.  1.4.2003-க்குப் பின் பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதி யத்திட்டம் அமல்படுத்தப்படும் போன்ற 4 விஷயங்களை உறுதிப் படுத்திவிட்டு, பேச்சுவார்த்தை துவங்க வேண்டும் என்பதை சிஐடியு சார்பில் வலியுறுத்துகிறோம்.  நீண்டகால பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதுடன், இப்போதைய கோரிக்கைகளையும் விரிவாக பேசி னால்தான் அது முழுமையான பேச்சு வார்த்தையாக அமையும்.  பணி யில் உள்ள, ஓய்வுபெற்ற ஊழியர் களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, அரசு திறந்த மனதுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும்.

ஜன.9 இல் தர்ணா

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, 9.1.2025ஆம் தேதி சென்னை பல்லவன் இல்லம் முன்பு அ. சவுந்தரராசன் தலைமையில் திட்டமிட்ட அடிப்படையில் தர்ணா போராட்டம் நடைபெறும்.  நமது கோரிக்கைகளை வென்றெடுக்க தர்ணா போராட்டத்தில் சக்தியான அடிப்படையில் பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக் கொள்வதுடன், அனைவருக்கும் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.