திருநெல்வேலி, ஜூலை 21- போராட்டங்கள் மூலம் தான் தொழிலா ளர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன என நெல்லையில் நடைபெற்ற சிஐடியு புதிய கட்டிடத் திறப்பு விழாவில் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் பேசினார். நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள குறிச்சி சிக்னலில் புதிதாக கட்டப்பட்ட சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தின் திறப்பு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. திறப்பு விழாவிற்கு சிஐடியு மாவட்டத் தலை வர் ஆர்.எஸ்.செண்பகம் தலைமை தாங்கி னார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன் வரவேற்று பேசினார். மூத்த தலைவர் சு.ராஜாமணி தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தார். புதிய கட்டிடத்தை அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்ம நாபன் திறந்து வைத்தார். கூட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன், சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனக ராஜ், சிஐடியு செயலாளர் ரசல், சிபிஎம் மூத்த தலைவர் வீ.பழனி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். திறப்பு விழாவில் ஏ.கே.பத்மநாபன் பேசிய தாவது:
போராட்டப் பாரம்பரியமிக்க சிஐடியு தொழிற்சங்கம் 1970 இல் தொடங்கி 58 ஆண்டு கள் தொடர்ந்து மக்களுக்காக போராடி வரு கிறது, சிஐடியு தொழிற்சங்கம் நடத்திய போராட் டங்கள் மூலம் எண்ணற்ற பேர்களுக்கு அடிப் படை உரிமை, கூலி உயர்வு உட்பட பல்வேறு உரி மைகள், சலுகைகள் கிடைத்துள்ளன. போக்கு வரத்து, பீடி, இன்சூரன்ஸ் என எந்த துறைகளை எடுத்துக் கொண்டாலும் போராட்டங்கள் மூலம் தான் தொழிலாளர்களின் உரிமைகள் நிலை நாட்டப்பட்டுள்ளது. இதை மனதில் வைத்து இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார். கூட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் பேசியதாவது:
மறைந்த தோழர் ம.ராஜாங்கம் தொழிலா ளர்களுக்காக பல போராட்டங்கள் நடத்தியவர், அவரது பெயரில் இந்த கட்டிடம் அமைந்திருப் பது பொருத்தமான ஒன்றாகும். நமது அமைப்பை வலுவாக கட்ட வேண்டும். மறைந்த தோழர் ராஜாங்கம் உயிருடன் இருந்தபோது பீடி தொழி லாளர்களை அதிகளவில் திரட்டியவர். அவர் விட்டுச் சென்ற பணியை நாம் தொடர்வோம். தோழர் ராஜாங்கத்தின் வழியை நாம் பின் பற்றுவோம் என்று அவர் பேசினார். பொதுக்கூட்டத்தில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செய லாளர் க.ஸ்ரீராம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கற்பகம், சிபிஎம் தென்காசி மாவட்டச் செயலாளர் முத்து பாண்டியன், சிஐடியு தென்காசி மாவட்டச் செய லாளர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் லட்சுமணன், ஏஐடி யுசி மாவட்டத் தலைவர் காசி விஸ்வநாதன், தொமுச மாநில அமைப்பு செயலாளர் தர்மன், எச்.எம்.எஸ் மாநில துணைத்தலைவர் சுப்ரமணி யன், டி.டி.எஸ்.எப் சந்தானம், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செல்லத் துரை, வி.தொ.ச மாவட்டச் செயலாளர் அருணா சலம், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம், சிவா, இந்திய மாணவர் சங்கம் மாவட்டச் செயலாளர் சஞ்சய், வரதன் மற்றும் மறைந்த தோழர் ராஜாங்கத்தின் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.