புதுதில்லி, ஆக.31- ஹரியானா மாநிலத்தில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ‘அங்கீகா ரம் பெற்ற சமூக சுகாதார செயற் பாட்டாளர்கள்’ எனப்படும் ‘ஆஷா’ ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், அவர்கள் மீதும் தொழிற்சங்கத் தலை வர்கள் மீதும் ஏவப்பட்டுள்ள அடக்கு முறைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் வலியுறுத்தி யுள்ளார். இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: ஹரியானா மாநிலத்தில் வேலை செய்துவரும் ‘ஆஷா’ ஊழியர்கள் சட்டப்படி வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்துவிட்டு, ஆகஸ்ட் 23 முதல் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து ஹரியானா மாநில ‘ஆஷா’ ஊழியர் சங்கத்தின் பொ துச் செயலாளர் சுனிதா, சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜைபக்வான், தலைவர் சுரேகா முதலானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு கைது செய்யப்பட்டதற்கு, காவல் துறையினரால் எக்காரணமும் கூறப் படவில்லை. அவர்களை போராட்டத் தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் செல்லாதவாறு தடுத்திடும் நோக்கத்து டன் பேருந்திலேயே சுற்றிச்சுற்றி வருகின்றனர். பெண் ஊழியர்களுக்கு இயற்கை உபாதைகளுக்குப் பதில் சொல்லக்கூட (கழிப்பிடங்களுக்குச் செல்லக்கூட) அனுமதி மறுத்துள்ள னர். குடிப்பதற்குத் தண்ணீர் தர மறுத்துள்ளனர்.
இவை அனைத்தும் மனித உரிமை மீறல்களாகும். நூற்றுக் கணக்கான ஆஷா ஊழியர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் ஒருவிதமான காட்டாட்சி சூழலை உருவாக்கிட காவல்துறையினர் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். ஆகஸ்ட் 27 இல் இருந்து பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டி ருக்கிறார்கள். இவ்வாறு ஆளும் பாஜக மாநில அரசு அடக்குமுறையைக் கட்ட விழ்த்துவிட்டிருந்த போதிலும், ஆஷா ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை உறுதியுடன் முன்னெடுத்துச் சென்றுகொண்டி ருக்கிறார்கள். ஹரியானா மாநிலத் தில் ஆஷா ஊழியர்கள் இவ்வாறு ஒன்றுபட்டு நின்று வீரஞ்செறிந்த முறையில் போராடிக் கொண்டிருப்ப தற்கு சிஐடியு தன் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. ஹரியானா மாநில பாஜக அர சாங்கம், குறிப்பாக முதல்வர் உடனடி யாகத் தலையிட்டு, ஜனநாயக முறையில் போராடும் ஊழியர்களின் தலைவர்களை அழைத்துப்பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று சிஐடியு கோருகிறது. அனைத்துவிதமான அடக்குமுறை களையும் துச்சமெனத்தூக்கி எறிந்து, வீரத்துடன் போராடிக் கொண் டிருக்கும் ஹரியானா மாநில ஆஷா ஊழியர்களுக்கு ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் தெரிவித்திட வேண்டும் என்று தொழிலாளர் வர்க்கத்தையும், குறிப்பாக சிஐடியு-வில் இணைந்துள்ள அனைத்து சங்கங்களையும் சிஐடியு அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரி வித்துள்ளார். (ந.நி.)