புதுச்சேரி, மே 18- ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் தோழர் சி.எச்.பாலமோகனன் என்று சிஐடியு அகில இந்திய செயலாளர் ஏ.ஆர்.சிந்து புகழாரம் சூட்டினார். புதுச்சேரி மூத்த தொழிற்சங்கத் தலை வரும், அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவருமான தோழர் சி.எச்.பாலமோகனின் மறைவையொட்டி அவரது படத்திறப்பு, நினைவேந்தல் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் செவ்வாயன்று (மே 17) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அரசு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியுவின் அகில இந்திய செயலாளர் ஏ.ஆர்.சிந்து கலந்து கொண்டு பேசினார்.
கடைநிலை ஊழியர்களின் கோரிக்கைகளை முன்வைத்து வெற்றி கிடைக்கும்வரை போராடி யவர். மற்ற மாநிலங்களில் அங்கன்வாடி பணியாளர்களை எப்படி நிரந்தரம் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பே அந்த பணி யாளர்களை அரசு ஊழியர்களாக மாற்றிய பெருமை தோழர் பாலமோகனனை சாரும். வெறும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அவர் போராடவில்லை, வெகுஜன மக்களுக்காக பல்வேறு போராட்டங்களுக்கு தலைமை தாங்கி வெற்றி பெற்றவர். நாடு இன்றைக்கு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மக்களின் ஜீவநாடி யான எல்.ஐ.சி., வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது. நாட்டில் வேலை யில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர் கள் மக்களுக்காக வாழ்கிறார்களா? இந்த சூழ்நிலையில் இந்திய தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளை, இன்றைக்கு இழந்து வரும் நிலையில் பாலமோகனின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கம்யூனிஸ்ட்டாக, தன்னலமற்றவராக வாழ்ந்த பாலமோகனன், ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார் என்றும் சிந்து புகழாரம் சூட்டினார்.
உருவப்படம் திறப்பு
முன்னதாக சி.எச்.பாலமோகனின் திருவுரு வப்படத்தை மூத்த தலைவர் தா.முருகன் திறந்து வைத்தார். திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ஆர்.சிவா, சிபிஎம் பிரதேச செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் பெருமாள், தமுஎகசவின் மதிப்புறு தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன், மத்திய, மாநில அரசு ஊழியர் பேரவையின் முன்னாள் தலைவர் முருகன், ஆசிரியர் சங்கத் தலைவர் சண்முகம், ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் சேது செல்வம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கொளஞ்சியப்பன், புதுச்சேரி சமூக நல்லிணக்க நிர்வாகி பஷீர் அகமது, அரசு ஊழியர் சம்மேளனத் தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் கிறிஸ்தோபர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.