மதுரை, நவ.1- சிஐடியு மாநில மாநாட் டிற்கு ஸ்தாபகத் தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி நினைவு ஜோதி பயணம் செவ்வா யன்று மதுரையிலிருந்து துவங்கியது. இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) தமிழ்நாடு மாநில 15 ஆவது மாநாடு நவம்பர் 4,5,6 ஆகிய தேதி களில் நாகர்கோவிலில் நடை பெறுகிறது. இதனை முன் னிட்டு சிஐடியு மதுரை மாந கர் சார்பில் சிஐடியு ஸ்தாபக பொதுச்செயலாளர் தோழர் பி.ராமமூர்த்தி நினைவு ஜோதிப்பயண துவக்க நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது. மதுரை அரசு போக்குவரத்து தலைமை யகம் முன்பு நடைபெற்ற பயண நிகழ்ச்சிக்கு மாநி லக்குழு உறுப்பினர் ஏ.கனக சுந்தர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இரா.லெனின், மாநிலக்குழு உறுப்பினர் ஜே.லூர்துரூபி, போக்குவரத்து ஊழியர் சம்மேளன உதவித்தலைவர் வீ.பிச்சை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜயராஜன் ஆகி யோர் கலந்துகொண்டனர். மதுரை துணைமேயர் தி.நாக ராஜன், தோழர் பி.ராம மூர்த்தி நினைவு ஜோதியினை பயணக்குழு தலைவர் சிஐ டியு மாநிலச் செயலாளர் இரா.தெய்வராஜிடம் எடுத் துக்கொடுத்து, பயணத்தை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சி யில் பலர் கலந்துகொண்ட னர்.
சின்னியம்பாளையம் தியாகிகள் ஜோதி, கே.ரமணி ஜோதி
உழைக்கும் வர்க்கத் தின் உரிமைக்கான போராட் டத்தில் உயிர் நீத்த செங் கொடி இயக்க புதல்வர்கள் சின்னியம்பாளையம் தியாகி கள் ஜோதி மற்றும் தமிழக தொழிற்சங்க இயக்கத்தின் மகத்தான தலைவர் தோழர் கே.ரமணி அவர்களின் ஜோதி பயணம் கோவையில் இருந்து செவ்வாயன்று எழுச்சியோடு புறப்பட்டது. கோவை சின்னியம் பாளையம் தியாகிகள் மேடையில் இருந்து தியாகி களின் ஜோதியை மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் எடுத்துக் கொடுக்க சிஐடியு கோவை மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி தலைமை யில் கோவை, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் வழியாக கன்னியாகுமரி சென்றடைகிறது. இந்நிகழ் வில் சிஐடியு கோவை மாவட்ட தலைவர் கே.மனோகரன், சிபிஎம் சூலூர் தாலுகா செய லாளர் சந்திரன், விசைத்தறி சங்க மாவட்ட செயலாளர் ஜோதிபாசு உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர். தோழர் கே.ரமணியின் நினைவு ஜோதி கோவை காந்திபுரத்தில் இருந்து சிஐ டியு திருப்பூர் மாவட்ட செய லாளர் கே.ரங்கராஜ் தலை மையில் ஜோதிபயணம் எழுச்சியோடு புறப்பட்டது. இந்த ஜோதி பயணத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார். இதில், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் சி. பத்மநாபன், மாவட்ட பொரு ளாளர் ஆர்.வேலுசாமி, சிபிஎம் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, சிஐடியு மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.ஆறுமுகம் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர். இந்த ஜோதி பயணம் திருப் பூர், திண்டுக்கல், மதுரை வழியாக மாநாட்டு திடலை சென்றடைகிறது.