அமெரிக்க மிரட்டலுக்கு சீனா பதிலடி
‘எந்தப் போருக்கும் இறுதிவரை தயார்’
ஜி ஜின்பிங் ‘புத்திசாலி’: டிரம்ப் திடீர் புகழாரம்!
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ‘புத்திசாலி’ என, அமெ ரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், திடீரென புகழ்ந்துள்ளார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இவ்வாறு புகழ்ந்துள்ளார். “ஜனாதிபதி ஜி ஜின்பிங் என்ன செய்ய வேண்டும் என்பதைத் துல்லியமாக அறிந்தவர் என்று நான் நினைக்கிறேன். அவர் மிகவும் புத்திசாலி. அவர் தனது நாட்டை நேசிக்கிறார். அது எனக்கு நன்றா கத் தெரியும். எனக்கு அவரை நன்றாகத் தெரியும்” என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியுள்ளார். மேலும், ‘ஜி ஜின்பிங் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்பு வார் என்று நான் நினைக்கிறேன். அது நடக்கும் என்றும் நான் நினைக்கிறேன். எங்கள் இருவ ருக்கும் இடையே தொலைபேசி உரையாடல் நடக்க லாம். அதற்கு எல்லாம் தயாராக உள்ளது. அப்படி ஒன்று நடந்து விட்டால், எங்களுக்கும், உலகத்துக் கும், மனித குலத்துக்கும் ஒரு பெரிய விஷயமாக இருக்கும்” என்று கீழே விழுந்தாலும் மண் ஒட்ட வில்லை என்ற கதையாக டிரம்ப் பேசியுள்ளார். உலகத் தலைவர்களை அவமானப்படுத்திய டிரம்ப் பல நாடுகள், வரிகளை குறைக்குமாறு கெஞ்சு வதாக டிரம்ப் முன்னர் பேசியிருந்தார். குடியரசுக் கட்சி விருந்தின் போது, “நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன், இந்த உலக நாடுகள் எங்களைத் தொடர்பு கொள்கின்றன. என் பிட்டத்தை (Ass) முத்த மிடுகின்றன” என உலகத் தலைவர்களை மிக கேவல மாக பேசினார் டிரம்ப். மேலும், “உலக நாடுகளின் தலைவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய இருக்கிறார்கள் எனவும் ‘தயவு செய்து, சார், ஒரு ஒப்பந்தம் செய்யுங்கள் என தன்னிடம் கெஞ்சுகிறார்கள்” எனவும் பேசினார். “நான் எதையும் செய்வேன்” என்று டிரம்ப் உலகத் தலைவர்களை மிக மோசமான முறையில் தாழ்த்திப் பேசினார். இந்தச் சூழலில் தான், திடீர் பல்டி அடித்து, “சீனா ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது. அதை எப்படிச் செய்வது என்று அவர்களுக்குத் தெரியாது. ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஒரு பெருமைக்குரிய புத்தி சாலி மனிதர். ஒப்பந்தத்திற்கான வழியை அவர்கள் கண்டுபிடிப்பார்கள்” என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் வரிகளுக்கு சீனா பதிலடி யாக வரி விதிக்கின்றது. கட்டுப்பட மறுத்து எதிர்த்து நிற்கிறது. துவக்கத்தில் சீனாவுக்கு சரிவு போல இருந்தாலும் சீனா பிற நாடுகளுடனான பொரு ளாதார உறவை மேம்படுத்தி தன்னை தக்க வைத்துக் கொண்டு முன்னேறிவிடும் என கூறப்படு கின்றது. இதனாலேயே டிரம்ப் புதிய தந்திரத்தில் இறங்கியுள்ளார்.
“வர்த்தகப் போர் உட்பட அமெ ரிக்காவின் எந்தப் போருக்கும் இறுதி வரை தயார்” என்று, சீனா வர்த்தக அமைச்சகம் பதிலடி கொடுத்துள் ளது. சீனப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 125 சதவிகிதம் வரை அதிகரித்து, அமெரிக்க ஜனா திபதி டிரம்ப் அறிவித்துள்ள நிலை யில், சீனா இந்தப் பதிலடியை அளித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்- வெளிநாட்டுப் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பு என்ற ஆயு தத்தைக் கையில் எடுத்து, உலக நாடுகள் மீது வர்த்தகப் போரைத் திணித்துள்ளார். இது உலகப் பொரு ளாதாரத்தில் பல்வேறு பிரச்சனை களை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படையில் சீனப் பொருட் கள் இறக்குமதியை குறிவைத்தே- வேறெந்த நாடுகளுக்கும் இல்லாத வகையில் 125 சதவிகிதம் வரை வரி விதித்துள்ளார். முதலில் 34 சத விகிதம், அடுத்ததாக 84 சதவிகி தம் என்று வரி விதிப்பை அதிக ரித்தார். இதனால், சீனா இறங்கி வரும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால், பதிலடியாக சீனாவும், அமெரிக்கப் பொருட்களுக்கு 84 சதவிகிதம் வரி விதித்து அதிர்ச்சி அளித்தது. இதனால், தற்போது அமெரிக்கா வரி விதிப்பை 125 சத விகிதமாக அதிகரித்துள்ளது. உலகத்திற்கு எதிரான செயல் மேலும், அமெரிக்காவின் எந்தப் போருக்கும் தயார் என்று சீனா அறி வித்துள்ளது. அமெரிக்காவின் வரிகள் “விதி களின் அடிப்படையிலான பலதரப்பு வர்த்தக அமைப்பை கடுமை யாக பாதிக்கின்றது. மேலும் உலகப் பொருளாதார ஒழுங்கின் உறுதித் தன்மையை கடுமையாக பாதிக் கின்றது” என்று கூறியிருக்கும் சீனா வின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், “இது வெளிப்படையாக உல கத்தின் விருப்பத்திற்கு எதிராக மற்றும் முழு உலகத்திற்கும் எதிரான ஒரு செயல்” என்று கண்டித்துள்ளார். சீன வர்த்தக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹீ யோங் கின், “அதிகரித்து வரும் வர்த்தகப் போரை நிறுத்த வேண்டும்” என அமெரிக்காவை வலியுறுத்தி யுள்ளார். “ஒருவேளை அமெரிக்கா சமரசம் அடையாவிட்டால் ‘இறுதி வரை போராடுவோம்’” என்று அவர் உறுதியாக கூறியுள்ளார். அதேநேரம், “பேச்சுவார்த் தைக்கான எங்கள் கதவு திறந்தே உள்ளது. அது பரஸ்பர மரியாதை யின் அடிப்படையில் இருக்க வேண்டும். சமமான முறையில் நடத்தப்பட வேண்டும்” என்றும் கறா ராக தெளிவுபடுத்தியுள்ளார். ஐக்கிய முன்னணியை உருவாக்கும் சீனா சீனா மீது, அமெரிக்கா அதிக வரிகளை விதித்துள்ள நிலையில், அமெரிக்காவிற்கு எதிராக ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கும் முயற்சியில் சீனா இறங்கியிருப்ப தாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. அதனை உறுதிப்படுத்தும் வகை யில் சீனா பல நாடுகளுடன் பேச்சு வார்த்தையையும் நடத்தி வருகின் றது. வர்த்தகப் போருக்கு இடையே ஒவ்வொரு நாடும் தங்கள் வர்த்த கத்தை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அதனைப் பயன்படுத்தி, அமெரிக்காவுக்கு எதி ராக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மலேசியாவுடன் சீனா பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.