தொழில் முதலீட்டை ஈர்க்க ஜெர்மனி, லண்டன் செல்கிறார் முதலமைச்சர்
சென்னை, ஆக.26- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை 1 டிரில்லியன் டாலர் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன் தொழில் மேம் பாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு நாடுகளின் முதலீடு களை தமிழ்நாட்டுக்கு பெற்று வருகிறார். 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் பொறுப்பை ஏற்றபிறகு முதல் முறையாக ஸ்டாலின் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றார். அங்கு ரூ.6,100 கோடி அளவுக்கு தொழில் ஒப்பந்தங் கள் செய்து வந்தார். பிறகு 2023 ஆம் ஆண்டு சிங்கப்பூர், ஜப்பான் சென்று ரூ.1,342 கோடி ஒப்பந்தங்கள் செய்தார். இதையடுத்து கடந்த ஆண்டு தொடக்கத் தில் ஸ்பெயின் நாட்டுக்கு சென்று ரூ.3,440 கோடிக்கு தொழில் ஒப்பந்தங்கள் மேற்கொண் டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அமெரிக்காவுக்குச் சென்று ரூ.7,616 கோடிக்கு பல்வேறு தொழில் மேம் பாட்டு ஒப்பந்தங்கள் செய்து வந்தார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழில் ஒப்பந்தங்களை மேற் கொள்வதற்காக 5 ஆவது முறையாக வெளி நாடு செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த முறை லண்டன், ஜெர்மனி நாடுகளுக்கு ஆக.30 ஆம் தேதி செல்லவுள்ளார். பயண விவரங்கள் ஆக.30 அன்று சென்னை விமான நிலையத் திலிருந்து ஜெர்மனிக்கு பயணத்தை தொடங்குகிறார். ஆக.31 அன்று ஜெர்மனி யில் உள்ள அயல்நாட்டு நிர்வாகிகளை சந்தித்துப் பேசுகிறார். செப்.1 அன்று ஜெர்மனி யிலிருந்து லண்டனுக்குப் பயணமாகிறார். செப்.2 அல்லது 3 அன்று கேம்பிரிட்ஜ் பல் கலைக்கழகத்தில் தொழில் முனைவோரைச் சந்தித்து உரையாடுகிறார். செப்.4 அன்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அயலகத் தமிழர் நல வாரியத்தின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். செப். 6 அன்று லண்டனில் உள்ள தமிழர் நல வாரியத்தின் நிகழ்வுகளில் பங்கேற் கிறார். செப்.7 அன்று லண்டனிலிருந்து சென் னைக்குத் திரும்பப் புறப்படுகிறார். செப். 8 அன்று அதிகாலை சென்னை வந்தடை கிறார். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், முதலமைச்சரின் தொழில் முதலீடு ஈர்ப்பு பய ணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படு கிறது.