tamilnadu

img

என்எல்சி பணியாளர் தேர்வு முறையில் மாற்றம்: பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்

சென்னை, மே 6- என்எல்சி நிறுவனத்தில் பட்டதாரி நிர்வாகப் பயிற்சி யாளர் பணிக்கு கேட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்யும் முடிவை மாற்றிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பிரதமர்  நரேந்திர மோடிக்கு அவர்  எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதா வது:- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் 300 பட்டதாரி நிர்வா கப் பயிற்சியாளர்களை கேட் தேர்வின் அடிப்படையில் நியமனம் செய்திடஉத்தேசித் துள்ளது. இது கடந்தகாலங்க ளில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் நடைமுறையிலிருந்து மாறுபட்டுள்ளது. கடந்த காலங்களில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சுரங்க நடவடிக்கைகளுக்காக நிலங்களை வழங்கியவர்களின் குடும்பத்தைச் சார்ந்த விண்ணப் பதாரர்களுக்கு, பட்டதாரி  நிர்வாகப் பயிற்சியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிக ளுக்கு பணியாளர்களைத் தேர்வு  செய்யும்போது முன்னுரிமை வழங்கப்பட்டு வந்துள்ளது.

தற்போது, என்எல்சி-யின் சுரங்க நடவடிக்கைகளுக்கு நிலம் கணிசமான அளவிற்குத் தேவைப்படும் சூழ்நிலை உள்ளது. அவ்வாறு தேவை யான நிலங்களைக் கையகப் படுத்தும்போது, அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதால், நிலங் களை வழங்கும் குடும்பத்தி னருக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்ற நியாய மான கோரிக்கை உள்ளூர் மக்களிடையே எழுந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, என்எல்சி நிறுவன சுரங்கப் பணி களுக்காக நிலம் மற்றும் வீட்டு மனைகளை வழங்கியவர்க ளுக்கு, பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர்உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான பணி யாளர்களைத் தேர்வு செய்யும்போது முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், என்எல்சி நிறுவ னத்தில் தற்போது உத்தேசிக் கப்பட்டுள்ள பணி நியமனமா னது கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் மேற்கொள்ளப் படும் என்ற திடீர் அறிவிப்பு, இந்த தேர்வை எழுதாத உள்ளூர்  விண்ணப்பதாரர்களை பாதிப் படையச் செய்வதோடு, அவர்க ளுக்கான வாய்ப்பைப் பறிப்பதாக அமையும்.  எனவே, பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணிக்கு கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் முடிவினை மாற்றிட வேண்டும். தற்போதைய பணியிடங்கள் மற்றும் எதிர் காலத்தில் ஏற்படும் பணியிடங்க ளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளின்போது, என்எல்சி நிறுவனம் தகுதித் தேர்வை நடத்த வேண்டும். அவ்வாறு பணியாளர்களைத் தேர்வு செய்யும்போது, என்எல்சி நிறுவனத்திற்காக நிலங்களை வழங்கியவர்களுக்கு முன்னு ரிமை அளிக்க வழிவகை செய்ய வேண்டும். இது குறித்து  உரிய அறிவுரைகளை மத்திய  நிலக்கரித்துறை அமைச்சகத் திற்கு வழங்கிட வேண்டும். இவ்வாறு முதல்வர் வலியுறுத்தியிருக்கிறார்.