tamilnadu

img

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

திருச்சி, மே 30- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்க ளன்று திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலு வலகத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற் கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வை யிட்டு ஆய்வு செய்வதற்காக தஞ்சாவூர், திரு வாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங் களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், திங்களன்று திருச்சிராப் பள்ளிக்கு வருகை தந்த முதல்வர், திருச்சிராப் பள்ளி மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அலு வலக வருகைப் பதிவேடு மற்றும் இதர பதி வேடுகளை ஆய்வு செய்து, பின்னர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை யும் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, முதல்வர் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களின் செயல்பாடுகள் குறித்தும், புதிய பேருந்து நிலைய அமைப்புப் பணியின் நிலை மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், குடிநீர் இணைப்பு, கட்டட அனு மதிகள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் கள், சொத்துவரி பெயர் மாற்றம் போன்ற பொதுமக்களுக்கான சேவைகளை தாமத மின்றி விரைந்து முடித்திட அலுவலர் களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத்  துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி உள்ளிட்டோர் உடனிருந்த னர்.