புதுதில்லி,மார்ச் 31- நான்கு நாள் பயணமாக தில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும், மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட 14 முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். புதுதில்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலு வலகமான அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழா ஏப்.2 அன்று நடக்கிறது. இதில் பங்கேற்ப தற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதனன்று (மார்ச் 30) தில்லி புறப்பட்டுச் சென்றார். அவரை அக்கட்சியின் எம்பிக்கள் வரவேற்றனர். பிறகு, நாடாளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 30 நிமிடம் பேசினார். அப்போது அவரிடம், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
கர்நாடகாவுக்கு எதிர்ப்பு
காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசால் மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சகம் அனுமதி வழங்கக் கூடாது. பாக் வளைகுடாவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ‘கச்சத்தீவு’ மற்றும் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்.
கூடுதல் ரயில்-நிலக்கரி தேவை!
நிலக்கரி குறித்த விவகாரங்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு அதிக அளவிலான நிலக்கரி பெறுவதற்கான முன்னெடுப்புகள் மற்றும் கூடுதலான ரயில் தொடர்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ‘ரெய்கார் புகழூர்’ உயர் மின் அழுத்த மின் தொடர மைப்பினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சொத்தாக அறிக்க வேண்டும்.
ஜிஎஸ்டி இழப்பு
மாநிலங்களுடன் மேல் வரிகள் மற்றும் கூடுதல் கட்டணம் மூலம் வரும் வருவாயைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், ஜூன் 2022-க்குப் பின்பும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டை தொடர்ந்து வழங்குதல்.
நீட் தேர்வு ரத்து!
மருத்துவ மாணவர் சேர்க்கை கொள்கை மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். உக்ரைனில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் படிப்பு தடைபட்ட நிலையிலிருந்து இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர வழியைக் கண்டறிய வேண்டும்.
பாதுகாப்பு ஆராய்ச்சி
பிரதம மந்திரி வேளாண்மை பயிர் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பங்களிப்பை முந்தைய நிலைக்கு உயர்த்த வேண்டும். காலணி உற்பத்தியில் பிஎல்ஐ திட்ட அறிமுகம். டிடிஐஎஸ் திட்டத்தில் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்திற்கு முன்னுரிமை ஒதுக்கீடு தேவை. தமிழ் நாட்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும். சேலம் எஃகு ஆலையின் மிகை நிலம் பாதுகாப்பு தொழில் பூங்காவிற்கு வழங்க வேண்டும். மப்பேடுவில் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க் வரை ரயில் பாதை அமைக்கவேண்டும்.
தேசிய கல்விக் கொள்கை
தேசிய கல்வி கொள்கை -2020 என்பது மாநில சுயாட்சிக்கே எதிரானது. அதில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களும் தமிழக மாணவர்கள் நலனுக்கு எதிரானது என்பதால், அந்தக் கொள்கை விலக்கிக்கொள்ள வேண்டும்.
ஹஜ் பயணத்தின் மையம்'
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - 2 இந்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே 50:50 பங்கு அடிப்படையில் ஒப்புதல் அளிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலன் 2022ல் ஹஜ் புனிதப் பயணத்திற்கான புறப்படும் இடமாக சென்னையை அறிவிக்க வேண்டும். நியூட்ரினோ ஆய்வக திட்டத்தை கைவிட வேண்டும்.
எஸ்டி பட்டியல்
நரிக்குறவர்கள்/குருவிக்காரர்கள் சமூகங்க ளை தமிழ்நாட்டின் பட்டியல் பழங்குடியினர் பட்டி யலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கியுள்ளன. தில்லி சென்றிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டா லின், திமுக அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்க வருகை தருமாறு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின்கட்காரி, காங்கிரஸ் தலை வர் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோ ரை வியாழனன்று (மார்ச் 31) காலையில் சந்தித்து அழைப்பு விடுத்தார். தில்லியில் தங்கியிருக்கும் முதல்வர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசுகிறார்.