tamilnadu

img

தொழிலாளர் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் அரசாக திமுக அரசு இருக்கும்

சென்னை,மே 1- சென்னை சிந்தாதிரிப்பேட் டையில் உள்ள மே தினப் பூங்காவில் அமைந்துள்ள நினைவுச் சின்னத் துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிறன்று (மே 1)  மலரஞ்சலி செலு த்தினார்.  பின்னர் அங்கு குழுமியிருந்த தொழிலாளர்கள் இடையே அவர்  பேசியதாவது: திமுக ஆட்சியே ஏழை, எளிய, பாட்டாளி பெருமக்களுக்காக நடை பெறும் ஆட்சிதான். இந்த ஓராண்டு காலத்தில் தொழிலாளர் நலனுக்காக எத்தனையோ சிறப்பான திட்டங் களைத் தீட்டி இருக்கிறோம் தீட்டிக் கொண்டிருக்கிறோம் – இன்னும்  தீட்ட ப்போகிறோம். பணிநேரம் முழுவதும் நின்று கொண்டே பணியாற்றி வரும் தொழி லாளர்களது துயர் துடைக்க  இருக்கை வசதியை அரசு  ஏற்படுத்திக் கொடுத்து ள்ளது.  அமைப்பு சாரா வாரியத்தில் உறுப்பினராக இருக்கும் 500 மகளி ருக்கு ஆட்டோ ரிக்ஷா வழங்கிட ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப் பட்டுள்ளது. அமைப்பு சாரா வாரியங் களில் உறுப்பினர்களாக இருந்த தொழிலாளர்களுக்குக் கடந்த ஆட்சி யில் நிலுவையாக வைக்கப்பட்ட உதவிகள் அனைத்தையும் நிலுவை யில்லாமல் வழங்கியதும் இந்த அரசு தான்.

 தமிழ்நாடு கட்டுமானத் தொழி லாளர் நல வாரியத் தொழிலாளர் களுக்கு விபத்து உதவித் தொகை யாக 1 லட்சம் ரூபாய் இருந்ததை 2 லட்சம் ரூபாய் ஆக்கியது தி.மு.க. அரசுதான்.  கட்டுமானத் தொழிலா ளர் நல வாரியத்தின் உறுப்பினர்க ளுக்கு மகப்பேறு நலத்திட்ட உதவித் தொகையை 6 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தித் தந்துள்ளது திமுக அரசுதான். கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர்களுக்கு திரு மண உதவித் தொகையாக இது வரை ஆண்களுக்கு 3 ஆயிரம், மகளி ருக்கு 5 ஆயிரம் என இருந்தது. அதனை அனைவருக்கும் 20 ஆயிரம் என உயர்த்தி வழங்க வேண்டும் என அறிவித்திருக்கிறோம். 18 அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரியங்க ளிலும் கடந்த ஓராண்டில் மட்டும் 1,35,660 பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்டங்களின்கீழ் 247 கோடி ரூபாய் மதிப்பில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

நல வாரிய உறுப்பினர்களுக்கு வீட்டு வசதித்திட்டம்

 தமிழ்நாடு கட்டுமானத் தொழி லாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வீட்டுவசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக் கிறது.  6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அமைப்பு சாராத் தொழி லாளர்களின் குழந்தைகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் நடை முறைப்படுத்த இருக்கிறது. எனது தலைமையிலான நமது அரசு, இது தோழர்களின் அரசாகத்தான் இருக்கும் – தொழிலாளர்களின் அரசா கத்தான்இருக்கும்– தொழிலாளர் களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் அரசாகத்தான் இருக்கும் மே தின பூங்கா சட்டமன்றத்தில் அன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உ.ரா. வரதராஜன் முதலமைச் சராக இருந்த  கலைஞரிடத்தில் ஒரு கோரிக்கை வைத்தார். மே தினத்தை யொட்டி, அந்த மே தினப் பூங்காவில் ஒரு நினைவுச்சின்னம் வைக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார். கோரிக்கை வைத்த உடனே, அதை ஏற்றுக் கொண்டது மட்டு மல்ல, மறுநாளே இந்த இடத்திற்கு வந்து, சுற்றிப்பார்த்து, பார்வையிட்டு எந்த இடத்தில் வைக்கலாம் என்று அதிகாரிகளுடன் கலந்து பேசி, ஆய்வு செய்து உடனடியாக அந்த இடத்தில் வைத்தார். அவர் வழிநின்று இன்றைக்கு இந்த இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கும் – இந்த ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் நானும் அவர் வழிநின்று தொழிலாளர்களைப் போற்றுவோம்! தொழிலாளர்களின் ஒற்றுமையை ஓங்கச் செய்ய உறுதி ஏற்போம்! உறுதி ஏற்போம்! என்று சொல்லி இங்கு வந்திருக்கும் தொழிலாளர் தோழர்கள் அத்தனைப் பேருக்கும் என்னுடைய மே தின வாழ்த்துகளைச் சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்” இவ்வாறு அவர் உரையாற்றினார்.