tamilnadu

img

ரோஜா முத்தையா நூலகத்திற்கு கொலோன் பல்கலை. ஓலைச்சுவடிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

ரோஜா முத்தையா நூலகத்திற்கு கொலோன் பல்கலை. ஓலைச்சுவடிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சென்னை,  செப். 10 - கொலோன் பல்கலைக்கழ கத்தின் தமிழ்த் துறை யால் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச் சுவடிகளை, ரோஜா  முத்தையா ஆராய்ச்சி நூலகத் தின் அறங்காவலர் மற்றும் இயக்கு நர்களிடம் முதல மைச்சர் மு.க. ஸ்டா லின் வழங்கினார்.  தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடு களுக்கு அரசுமுறைப் பயணம் மேற் கொண்டபோது, ஜெர்மனி நாட்டின், கொ லோன் பல்கலைக்கழகத்திற்கும் முதல மைச்சர் சென்றார். அங்கு பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள் உள்பட 40 ஆயிரம்  அரிய தமிழ் நூல்களைக் கொண்ட தமிழ்த்துறை நூலகத்தை முதலமைச்சர் பார்வையிட்டார். கொலோன் பல்கலைக் கழகம் தமிழ்த்துறை தொடர்ந்து, தொய் வின்றி, இயங்கிட தமிழ்நாடு அரசின் சார்பில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி யுதவியையும் வழங்கினார். அப்போது, கொலோன் பல்கலைக் கழக தமிழ்த் துறையால் பழங்கால ஓலைச்சுவடிகள் முதலமைச்சரிடம் வழங்கப் பட்டன. அந்த ஓலைச்சுவடிகளையே தற்போது சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கு முதலமைச்சர் வழங்கியுள்ளார். தலைமைச் செயலகத்தில் புதனன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நூலக அறக் கட்டளையின் அறங்காவலர் ஆர். பால கிருஷ்ணன், இயக்குநர்கள் பிரகாஷ் மற்றும் சுந்தர் ஆகியோர் ஓலைச்சுவடிகளைப் பெற்றுக் கொண்டனர். தலைமைச் செய லாளர் நா. முருகானந்தம் மற்றும் அரசு உயர்  அலுவலர்கள் உடனிருந்தனர்.