tamilnadu

img

சேதுசமுத்திர திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும்

சென்னை, ஜன.8 - சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய “பாதை மாறா பயணம்” நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமையன்று (ஜன.7) சென்னை யில் நடைபெற்றது. நூலை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு பேசிய தன் சுருக்கம் வருமாறு: தமிழ்நாட்டில் தங்க நாற்கரச் சாலை களை அமைத்ததோடு, தேசிய நெடுஞ்சாலை களில் ஏராளமான மேம்பாலங்களை கட்டி யவர். 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, 2 ஆயிரத்து 427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேது சமுத்திரத் திட்டத்தை பாலு கொண்டு வந்தார். இந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல் பாஜக தடுத்தது. அந்தக் கட்சியின் ஒன்றிய அமைச்சர்களில் ஒருவரான ஜிதேந்திரசிங், “இராமேஸ்வரம் கடல் பகுதியில் ராமர் பாலம் இருந்ததாக உறுதியாக கூறமுடியாது” என்று மாநிலங்களவையில் பேசியிருக்கிறார்.  

சேதுசமுத்திர திட்டத்தை பாஜக தடுக்காமல் இருந்திருந்தால் கடந்த 18 ஆண்டுகளில் தமிழ்நாடு எவ்வளவோ பயன் களை  அடைந்திருக்கும். இந்தியாவுக்கும் பெருமை வந்து சேர்ந்திருக்கும். நாட்டின் அந்நியச் செலாவணி வருவாய் அதிகரித்தி ருக்கும். தமிழ்நாட்டில் தொழில் வணிகம் பெருகி இருக்கும். தமிழ்நாடு மற்றும் அண்டை மாநில துறைமுகங்களில் சரக்குகளைக் கையாளும் திறன் அதிகரித்திருக்கும். கடல்சார் வர்த்தகம் பெருகி, அதன் காரண மாக மீனவர்களுடைய பொருளாதாரமும், வாழ்க்கைத் தரமும் பெருகியிருக்கும். இத்தனை வளர்ச்சியையும் பாஜகவும்-அதிமுகவும் தடுத்து விட்டது. சேதுசமுத்திர திட்டத்தை மீண்டும் கொண்டு வர டி.ஆர்.பாலு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக பொதுச் செய லாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.