பருவமழை முன்னெச்சரிக்கை
சென்னை, செப்.19- வடகிழக்கு பருவமழை முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாயன்று (செப்.19) தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை யில் நடைபெற்றது. அப்போது வடகிழக்குப் பருவ மழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு ஆயத்தப் பணிகள் குறித்து தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் எடுத் துரைத்தனர். தொடர்ந்து துறையின் அதிகாரிகள் இது குறித்து விளக்க மளித்தனர். பின்னர் இந்த கூட்டத்தில் உரை யாற்றிய முதல்வர், “கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகளின் காரண மாக பொதுமக்கள் பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட்ட னர். அதேபோல், சிறப்பாகத் திட்ட மிட்டு, இந்த ஆண்டும் நாம் எதிர்வரும் பருவமழை காலத்தை அதேபோன்ற முறையை கையாளவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். பேரிடர்களை எதிர்கொள்ள பல்வேறு அணுகுமுறைகளை பல்வேறு துறைகளின் மூலமாக மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. உட்கட்டமைப்புகளை வலுப்படுத்து தல், தகவல் பரிமாற்றத்தைக் கூர்மைப் படுத்துதல், பணியாளர்களுக்கான பேரிடர் நிர்வாகப் பயிற்சி வழங்கு தல், பொதுமக்களைத் தயார்படுத்து தல், துல்லியமான வானிலை அறிக் கைகளைப் பெற நடவடிக்கைகளை எடுத்தல் போன்ற பல்வேறு அம்சங் களை உள்ளடக்கியது தான் பேரிடர் மேலாண்மை என்றும் அவர் தெரி வித்தார்.
அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டுக்கு, 443.0 மி.மீட்டர் மழை இயல்பாக கிடைக்கப் பெறுகிறது. இது தமிழ்நாட்டின் வருடாந்திர இயல்பான மழை அளவு, 48 விழுக்காடு. எனவே, இந்த காலத்தில் ஏற்படும் இழப்பு மற்றும் சேதம் ஆகியவற்றைக் குறைப்பது மிகவும் அவசியமாகிறது எனவும் கூறினார். மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம், மாவட்ட அவசர கால கட்டுப் பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் வலுப்படுத்தப் பட்டுள்ளது. மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையங்களை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் பொதுமக்கள் தொடர்பு கொள்ள லாம் என்றும் முதல்வர் அறிவித்தார். பேரிடர் குறித்த எச்சரிக்கை தகவல்கள் கடலோர பகுதிகளில் 424 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை கருவிகள், செயலி, பொதுவான எச்சரிக்கை நடை முறை, அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்க ளுக்கு உரிய காலத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்பிற்குள் ளாகும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், நிவாரண மையங்கள் கண்டறியப்பட்டு, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நிவாரண முகாம்களில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உள் ளதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். என்றும் தெரிவித் தார்.
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி, தூர்வாருவது, கரைக ளையும் வலுப்படுத்த வேண்டும். அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் போது பொது மக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை வழங்க வேண்டும். மழை, வெள்ள காலங்களில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம். பள்ளிகளில் மாணவர்களின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும். பேரிடர் காலங்களில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். நோயுற்ற மக்களுக்கு சிகிச்சை வழங்கும் வகையில், உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், பாம்பு கடிக்கான மாற்று மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை போது மான அளவு இருப்பு வைக்க வேண்டும். மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் வாரியப் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள், மின் வாரியப் பணிகள் என பல்வேறு பணிகள் காரணமாக மட்டு மல்லாமல், பொதுவாக பழைய சாலை கள் நிலை போதிய பராமரிப்பு இல்லா மல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு, புயல், கனமழை மற்றும் காற்றின் வேகம் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்களை தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் உடனுக்குடன் அனுப்ப நடவடிக்கை கள் மேற்கொள்ள வேண்டும் என்றெல் லாம் முதல்வர் கேட்டுக்கொண்டார்.