tamilnadu

img

தமிழ்நாட்டில் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள மணிப்பூர் வீரர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

சென்னை, ஜூலை 23- தமிழ்நாட்டில் விளை யாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர் களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத் துள்ளார். இது தொடர்பாக தமிழ் நாடு அரசு சார்பில் வெளி யிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது: தேசிய மற்றும் சர்வ தேச விளையாட்டு போட்டி களில் பங்கேற்கும் விளை யாட்டு வீரர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பயிற்சி வசதி கள் மற்றும் உள்கட்ட மைப்புகளை வழங்குவதில் தமிழ்நாடு முதன்மை மாநில மாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு அரசு எடுத்து வரும் விளையாட்டு மேம் பாட்டு முன்னெடுப்பு திட்டங் களால், தேசிய மற்றும் சர்வ தேச அளவில் பல்வேறு விளையாட்டுகளில் தமிழ் நாட்டைச் சேர்ந்த விளை யாட்டு வீரர்கள் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று வரு கின்றனர். விளையாட்டுப் போட்டி களில் திறமைக்கு பெயர் பெற்ற மாநிலமான மணிப் பூரில் உள்ள தற்போதைய நிலையை தமிழ்நாடு மிகுந்த கவலையுடனும், வேதனை யுடனும் பார்க்கிறது. மணிப் பூர் எப்போதும் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான சாம்பியன்களை, குறிப்பாக பெண் சாம்பியன்களை உரு வாக்கி வந்துள்ளது.

கேலோ இந்தியா இளைஞர் விளை யாட்டுப் போட்டிகளை அடுத்த ஆண்டு (2024) நடத்துவதற்கான மாநில மாக தமிழ்நாடு தேர்வு செய்ய ப்பட்டுள்ளது. இந்த போட்டி யினை சிறப்பாக நடத்து வதற்கான அனைத்து ஏற் பாடுகளும் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன. “யாதும் ஊரே யாவரும் கேளீர்” – எல்லா ஊரும் எனது ஊர். எல்லா மக்களும் எனது உறவினர் என்று நினைத்து, அன்பே வாழ்வின் அடிப் படை ஆதாரம் என்று வாழ்ந்தால், இந்த வாழ்வு மிகவும் இனிமையானதாகத் திகழும் என்ற கணியன் பூங்குன்றனாரின் புற நானூற்று வரிகள் தான் தமிழர் பண்பாட்டின் அடை யாளமும், அடித்தளமும் ஆகும். அந்த வகையில், தற்போது மணிப்பூர் மாநி லத்தில் ஆசிய விளை யாட்டு, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் போன்ற தேசிய  மற்றும் சர்வதேச போட்டி களுக்கு பயிற்சி அளிக்க  சாதகமற்ற சூழ்நிலை நிலவு வதால், அம்மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பயிற்சிகள் பெறு வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லினை நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.

இந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்க னைகளுக்கு தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் உயர்தர பயிற்சிகள் அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் உறுதி யளித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் கள் மற்றும் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு வசதிகனை பயன்படுத்திக் கொள்ள அவர்களின் விவரங்களை அதாவது தங்கள் பெயர், முகவரி, அடையாளச் சான்று, தொடர்பு விவரங் கள், விளையாட்டு சாதனை கள் மற்றும் பயிற்சித் தேவை கள் போன்ற விவரங்களுடன் மின்னஞ்சல் – (sportstn 2023@gmail.com) முகவரியில் மற்றும் தொலைபேசி எண். +91-8925903047 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட் டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.