tamilnadu

img

சமத்துவ மயானங்களுக்கு ரூ.10 லட்சம்

சென்னை,டிச.25- விடுதலை சிறுத்தைகள் கட்சி  சார்பில் விருதுகள் வழங்கும் விழா தலைவர் தொல்.திரு மாவளவன் தலைமையில் சென்னை பெரியார் திடலில்  வெள்ளியன்று (டிச. 24)  நடைபெற்றது. இதில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு “அம்பேத்கர் சுடர்” விருதும், வைகோவுக்கு “பெரி யார் ஒளி” விருதும், தமிழ் இலக்கிய ஆர்வலர் நெல்லை கண்ணனுக்கு “காமராசர் கதிர்”  விருதும், குடியரசு கட்சி தலைவர்  பி.வி.கரியமாலுக்கு “ஆயோத்தி தாசர் ஆதவன்” விருதும், இந்திய  தேசிய லீக் தலைவர் மு.பஷீர் அகமதுக்கு “காயிதே மில்லத்  பிறை” விருதும், மொழியியலா ளர் கா.ராமசாமிக்கு “செம்மொழி ஞாயிறு” விருதும் வழங்கப் பட்டன. இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில். “வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட் டுள்ள வழக்குகளை, விரைவாக இறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, 18 சிறப்பு நீதிமன்றங் கள் இயங்கி வருகின்றன. மேலும்,  நான்கு நீதிமன்றங்கள் புதி தாக அமைக்க உத்தரவிடப்பட்டு ள்ளது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோரை, சமுதாயக் கண்ணோட் டத்துடன் அணுகி, முறையான நிவாரணம், வளமான எதிர்காலத் திற்கான உத்தரவாதம் ஆகியவற்றை வழங்க தேவை யான, விழிப்புணர்வு பயிற்சி கள், ‘சமத்துவம் காண்போம்’ என்ற தலைப்பில், காவல்துறை, வருவாய்த் துறை அலுவலர்க ளுக்கு நடத்தப்படும்” என்றார்.

சமத்துவ மயானங்கள்

தமிழ்நாட்டில், பல கிராமங்க ளில், சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இறுதிப் பயணத்திலும் பிரிவினைகள் இருக்கக் கூடாது என்கிற காரணத்தால், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் சிற்றூர்களுக்கு ஊக்கத் தொகையாக, வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்த, அரசு சார்பில், 10 லட்சம் ரூபாய் பரிசுத்  தொகை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திரு மாவளவன்,“  மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர், கேரள  முதலமைச்சர் பினராயி விஜயன், புதுவை மாநிலத்தின் முதலமைச்சர் வெ.நாராயணசாமி ஆகியோர் அம்பேத்கர்சுடர் விருதை பெற்று நமக்கு பெருமை சேர்த்தார்கள். அந்த வரிசையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதை பெறுகிறார்” என்றார். தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, நமது தேசத்திற்கே ஆபத்து சூழ்ந்திருக்கிறது. சங்பரிவார் கும்பலைச் சார்ந்தவர்கள் இந்த தேசம் இந்துக்கான தேசம். அதை  உருவாக்குவதற்காக யுத்தம் புரிவோம், முடியவில்லை என்றால் செத்து மடிவோம். இஸ்லாமியர்களைக் கொல்லு வோம் என்று வெளிப்படையாக உறுதிமொழியை எடுத்திருக்கி றார்கள் என்றும் எச்சரிக்கை செய்தார். பாஜகவின் செயல்திட்டம்ட மிகவும் ஆபத்தானவை. ஒரே தேசம்; ஒரே கலாச்சாரம் என்கி றது. ஒரே தேசம்; ஒரே கட்சி என்கிறது. ஒரே கட்சி; ஒரே ஆட்சி என்கிறது. மாநிலக் கட்சிகள் கூடாது, மாநில அரசுகள் கூடாது என்கிற அடிப்படையில்தான் செயல்பட்டுக் கொண்டிருக் கிறார்கள். இவை அனைத்தும் ஆர்எஸ்எஸ்சின் செயல் திட்டம்.  இதை பாஜக நடைமுறைப் படுத்துகிறது. எனவே பெரியார்,  அண்ணா, கலைஞர் விட்டுச் சென்ற பணிகளை முன் எடுக்க  வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கி றது என்றும் திருமா கூறினார்.