tamilnadu

img

டோக்கியோ - சென்னை இடையே நேரடி விமான சேவை தொடங்குக!

சென்னை, மே 31- டோக்கியோ மற்றும் சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தக் கோரி,  ஒன்றிய சிவில் விமான போக்கு வரத்துத் துறை அமைச்சர் ஜோதிரா தித்ய சிந்தியாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர்  எழுதி யுள்ள கடிதத்தில் தமிழ்நாட்டிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான பொரு ளாதார மற்றும் கலாச்சார உறவுகள்  தொடர்ந்து வலுவடைந்து வருவதுடன்,  சுற்றுலா வடிவிலும் இருநாட்டு மக்க ளுக்கு இடையிலான உறவுகள் வளர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது சென்னைக்கும் டோக்கியோவுக்கும் இடையே நேரடி விமான சேவை இல்லை என்றும், 2019  ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில், ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய விமான  நிறுவனமான ஆல் நிப்பான் ஏர்வேஸ்  சென்னை மற்றும் டோக்கியோ இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கியதாகவும், கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் இது நிறுத்தப் பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள முதல்வர், அதன்பிறகு இந்த விமான சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

நேரடி விமான இணைப்பு இல்லாத தால், சென்னைக்கும் டோக்கியோ வுக்கும் இடையிலான பயண நேரம்  சுமார் 7 மணி நேரம் இரட்டிப்பாகி யுள்ளதாகவும், சென்னை-டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று  தமிழ்நாட்டிள்ள ஜப்பானிய தொழில்  நிறுவனங்களைச் சார்ந்தவர்களிட மிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்து கொண்டிருப்பதாகவும் முதல் வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள் ளார். 2024, ஜனவரியில் உலக முதலீட்டா ளர்கள் மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த வுள்ள நிலையில், ஜப்பானிலிருந்து அதிக முதலீடுகளை ஈர்த்திட ஏதுவாக,  நேரடி விமானங்களை மீண்டும் தொடங் குவது உண்மையில் வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருக்கும் என்று  குறிப்பிட்டுள்ள முதல்வர், இவற்றைக்  கருத்தில் கொண்டு, சென்னைக்கும் டோக்கியோவுக்கும் இடையே நேரடி  விமான சேவையை மீண்டும் தொடங்கத் தேவையான நடவடிக்கை களை உடனடியாக எடுக்குமாறு ஒன்றிய அரசைக் கேட்டுக் கொண்டுள் ளார். அதேபோல்,  சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே அதிக விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என்ற பிரச்சினையை சிங்கப்பூர் அரசின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம் தன்னைச் சந்தித்தபோது எழுப்பியதாகவும், இதேபோன்ற கோரிக்கையை சிங்கப்பூ ரில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்கள்  பலரும் முன்வைத்ததாகவும் முதல்வர்  குறிப்பிட்டுள்ளார்.  சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையில் அதிக விமானங்களை இயக்கிட அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பரிசீலிக்க வேண்டுமென்று முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித் துள்ளார்.

;