tamilnadu

img

புதிய மருத்துவக் கல்லூரிகள் விவகாரம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை, அக்.4- புதிய மருத்துவக் கல்லூரி களைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பை உடனடியாக நிறுத்தி வைக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்  எழுதியுள்ளார். கடிதத்தின் விவரம் வருமாறு: தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பைப் பற்றி தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். அந்த அறிக்கையின் படி, இளநிலை மருத்துவக் கல்விக்கான தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய  விதிமுறைகள், 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகபட்சமாக 100  மருத்துவ மாணவர் சேர்க்கை  இடங்கள் மட்டுமே அனு மதிக்கப்படும் என்றும் அதற்கு கூடுதல் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளோ, மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களோ அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாநில உரிமைகள் மீதான நேரடி  ஆக்கிரமிப்பாகும். மேலும் பொது சுகாதாரத் துறையில், பொது சுகாதார கட்ட மைப்பிலும் பெரிய அளவில் முதலீடு செய்துள்ள மாநிலங்க ளுக்கு வழங்கப்படும் தண்டனை யாகும். தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்கள் பல ஆண்டுகளாக பொது சுகாதாரத் துறையை மேம்படுத்தி வருகி றது. அதனால் தான் இங்கே மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை இல்லாமல் இருக்கிறது. சென்னை இந்தியா வின் மருத்துவ தலைநகரம் என்றளவுக்கு உயர்ந்துள்ளது. பொதுத்துறை மட்டுமல்லாது தனியார் துறையிலும், நமது தேர்ந்த மருத்துவ நிபுணர்கள் தமிழகம் மட்டுமல்லாது

இந்தியா வின் பிற மாநில மக்களுக்கு சிறந்த மருத்துவத்தை தருகின்ற னர். ஆனால் தரமான சுகாதார சேவைகளுக்கான தேவை தமிழ்நாட்டில் மென்மேலும் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், புதிய மருத் துவ கட்டமைப்புகள் மிகமிக அவசியம். எதிர்காலத் தேவை களை கருத்தில் கொண்டு இவை அமைக்கப்பட வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவ இடங்கள் என்று நிபந்தனை விதிப்பது பொருத்தமானதாக இல்லை. மேலும், புதிய மருத்து வக் கல்லூரி தொடங்க கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டதற்கான காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. மருத்துவர் - மக்கள்  விகிதாச்சாரம் பற்றி சுட்டிக்காட்டி யுள்ளார்கள். தமிழ்நாட்டில் போதுமான அளவு மருத்துவர் - மக்கள் விகிதாச்சாரம் இருந்தாலும் கூட சில மாவட்டங்களில் மருத்துவர் - மக்கள் விகிதாச்சாரத்தில் பற்றாக்குறை இருக்கத்தானே செய்கிறது. இந்தப் பிரச்ச னைக்கு பின்தங்கிய பகுதிகளில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதே தீர்வாக இருக்க முடியும். புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மாநில நில வரங்களைக் கொண்டு தடை விதிப்பது தேவையுள்ள மாவட்டங்களுக்கு அநீதி இழைப் பதாகிவிடும். புதிய மருத்துவக் கல்லூரி களைத் தொடங்குவது தொடர் பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வலியுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.