சென்னை, மே 2- மாநிலம் முழுவதும் ரூ.2,406 கோடி செலவில் சாலைகள் மேம் படுத்தப்படும் என்று சென்னையில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை யின் பவள விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை யின் பவள விழா சென்னை கிண்டியில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, நெடுஞ்சாலைத் துறையின் கண்காட்சியை பார்வையிட்டார். அதன்பின்னர் நெடுஞ்சாலைத் துறையின் பவளவிழா நினைவுத் தூணை திறந்து வைத்தார்.
பின்னர் குமரியில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழை நடை பாதை, மதுரை ராஜாஜி மருத்துவ மனை அருகில் கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.150 கோடியில் கட்டப் படும் சாலை மேம்பாலம், சென்னை மத்திய கைலாஷ் சாலை சந்திப்பில் ரூ. 47 கோடியில் மேம்பாலம், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் - தாராபுரம், திருச்சி மாநகர், தாம்பரம்-முடிச்சூர், மதுரை மாநகர் உள்ளிட்ட 32 சாலை களை ரூ.2406 கோடி அகலப் படுத்தும் பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். மேலும் நெடுஞ் சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐந்து மூத்த பொறியாளர் களையும் கவுரவித்தார். பிறகு விழாவில் உரையாற்றிய முதலமைச் சர் மு.க. ஸ்டாலின், தரமான சாலை களை அமைப்பதே தமிழக அரசின் இலக்கு என்றும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறி ஞர் கலைஞர் சாலை’ என அழைக்கப் படும் என்றும் அறிவித்தார். தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதியில் நெடுஞ்சாலைத் துறைக்கு முக்கியப் பங்கு உள்ளதாகக் கூறிய முதலமைச்சர், மாவட்ட தலைமை இடங்கள் மற்றும் தாலுகா தலைமை இடங்களை இணைக்கும் 2700 கிலோ மீட்டர் நீளமுள்ள மாநில சாலைகள் அடுத்த பத்தாண்டுகளில் நான்குவழிச்சாலைகளாகவும் 6 ,700 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் இருவழிச் சாலைகளாகவும் முதலமைச்சர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்படும் அவர் என்றும் கூறினார்.
1281 தரை தரைபாலங்கள் ரூ.2410 கோடி செலவில் உயர்மட்ட பாலமாக கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் இதன் முதற்கட்டமாக 648 தரை பாலங்கள் 510 கோடி செலவில் உயர்மட்ட பாலமாக கட்டப்படும் என்றும் அறிவித்தார். ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட கிராமங் கள் அனைத்துக்கும் இணைப்புச் சாலை அமைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். நெடுஞ்சாலைத் துறை பணியில் சுணக்கம் ஏற்படக்கூடாது என்பதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள் ளதாகவும் முதலமைச்சர் தெரிவித் தார். விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சா.மு. நாசர், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குநர் பி.கணேசன், தலைமை பொறி யாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.