சென்னை,மார்ச்.8- சென்னையின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள், நகரை அழகு படுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்வகையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மாமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட 200 வார்டுகளுடன் செயல்படுகிறது. சுமார் ஒருகோடி பேர் சென்னை மாநகர எல்லைக்குள் வசிக்கிறார்கள். இவர்களின் அடிப்படையான தேவைகள், வசதிகளை மேம்படுத் துவதற்காக பல்வேறு திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. மேலும் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு சென்னை மாநகராட்சிக்கு புதிதாக கவுன்சிலர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். மேயர், துணை மேயர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பதவியேற் றுள்ளனர். புதிய மாமன்ற கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இக்கூட் டத்தில் 2022-2023-ம் ஆண்டுக்கான வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்யப் பட உள்ளது. இதற்கான பட்ெஜட் தயாரிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடை பெற்று வருகிறது. மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் துறை அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு பட்ஜெட் பணிகளை விரைவு படுத்தியுள்ளார். சென்னையின் வளர்ச்சி க்கான பல்வேறு திட்டங்கள், நகரை அழகு படுத்தும் பணிகளுக்கு முக்கி யத்துவம் கொடுக்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தை வருகிற 21-ந்தேதிக்குள் கூட்டி தாக்கல் செய்ய வேண்டும். அதற்குள்ளாக பட் ஜெட்டிற்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணியில் மாநகராட்சியின் அனைத்து துறை அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின் றனர்.