tamilnadu

img

சென்னை மாநகராட்சி வயது 334

சென்னை, ஜன. 28- உலகில் உள்ள மாநகராட்சிகளில் சென்னை மாநகராட்சி தனி பாரம்பரிய  சிறப்பும், தனித்துவமும் கொண்ட தாகும். சென்னை மாநகராட்சி உலகின் 2-வது பழமையான மாநகராட்சியாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு 334 வயதா கிறது. சென்னை மாநகராட்சி தொடங்கப் பட்டபோது சென்னை நகரை ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனியி னர் ஆட்சி செய்து வந்தனர். அந்த சமயத்தில் சென்னை சிறு சிறு கிராமங்க ளின் கூட்டமைப்பாக இருந்தது. சென்னை மக்களுக்கு ஆட்சி அதிகாரம்  செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று 1687ஆம் ஆண்டு சர் ேஜாசையா சைல்டு என்பவர் இங்கிலாந்து அரசருக்கு கடிதம் எழுதி னார். அதைத் தொடர்ந்து, 1688 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி சென்னை மாநகராட்சி உதயமானது. சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக நதநில் ஹக்கின்சன்ஸ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.

இவர்  அமெரிக்காவில் பிறந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அவரு டன் 3 தமிழர்க ளும் மாநகராட்சி நிர்வாக பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இடையில் சிறிது நாட்கள் சென்னை மேயர் பதவியை பிரசிடெண்ட் என்று அழைத்தனர். 1933 ஆம் ஆண்டு முதல்  மீண்டும் மேயர் பதவி என்று அழைக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடக்கப்பட்டது. மீண்டும் 1996 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பதவியை 2 ஆங்கிலேயர்கள் 2 முறை வகித்துள்ளனர். தமிழர்களில் எம்.ஏ. முத்தையா செட்டியார் இரண்டு முறை மேயராக இருந்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு 1913 ஆம்  ஆண்டு ரிப்பன் மாளிகை கட்டப்பட்டது. 252 அடி நீளம், 126 உயரத்துடன் 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது. ரூ.7.5 லட்சம் செலவில் இந்த கட்டிடத்தை கட்டி முடித்ததாக கூறப்படுகிறது.

;