சென்னை,மார்ச் 25- வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவு வதாலும், வெப்பச் சலனம் காரணமாகவும் மார்ச் 26, 27, 28ஆம் தேதிகளில் தமிழ கத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.