tamilnadu

img

19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,நவ.13- தெற்கு அந்தமான் கடல்  பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.  இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16 ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  நிலவுகிறது. இதன் காரணமாக செவ்வாயன்று (நவ.14) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி  மின்னலுடன் கூடிய லேசானது  முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும்  புதுச்சேரியில் ஓரிரு இடங்க ளில் கன முதல் மிக கனமழை யும், திருவள்ளூர்,

சென்னை,  இராணிப்பேட்டை, திரு வண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப் புள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. வரும் 15 ஆம் தேதி தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி  மின்னலுடன் கூடிய லேசானது  முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங் களில் கனமழை பெய்யவாய்ப் புள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளாது. வரும் 16 ஆம் தேதி தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திண்டுக்கல், விருது நகர், சிவகங்கை, தூத்துக் குடி, தஞ்சாவூர் மற்றும்  புதுக்கோட்டை மாவட்டங் களில் ஓரிரு இடங்களில்  கனமழை பெய்யவாய்ப் புள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. வரும் 17 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி  மின்னலுடன் கூடிய லேசானது  

முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் கடலூர், அரிய லூர், பெரம்பலூர், திருச் சிராப்பள்ளி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் புதுக் கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் 18 மற்றும் 19  ஆகிய தேதிகளில் தமிழ்நாடு,  புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. வானிலை முன்னறிவிப்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும், அவ்வப் போது ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப் புள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.  மீனவர்களுக்கான எச்சரிக்கை தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் சூறா வளிக்காற்று மணிக்கு 40 முதல்  45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர்  வேகத்திலும் வீசக்கூடும்.  வங்க கடல் பகுதிகள் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய  அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வரும் 15 ஆம் தேதி தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.