tamilnadu

img

கொரோனா நான்காவது அலைக்கு வாய்ப்பு?

சென்னை, ஏப்.24- இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கணக்கிடும் ஆர்-வேல்யூ திடீரெனக் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், நாட்டில் கொரோனா நான்காவது அலை ஏற்படுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆர்-வேல்யூ என்றால் என்ன?

ஆர்-வேல்யூ என்பது எண் வரிசை யில் ஒன்றுக்கும் குறைவாக இருந்  தால்தான் கொரோனா பரவல் குறை வாக இருக்கிறது என்று அர்த்தம். ஒன்று அல்லது அதிகமாகச் செல்லும்போது, பரவல் வேகம் அதி கரிக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஆர்-வேல்யூ என்பது தொற்றுள்ள ஒருவர் மூலம் எத்தனை பேருக்கு அது பரவுகிறது என்பதைக் குறிக்கும். உதாரணத்திற்கு கொரோனா பரவுவதைக் குறிக்கும் தில்லியின் ஆர்-மதிப்பு, இந்த வாரம் 2.1 ஆகப்  பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபர் மூலம்  மேலும் இருவருக்குத் தொற்று ஏற்படுவதைக் குறிக்கிறது. இந்நிலையில், சென்னை ஐஐடி யின் கணிதத் துறை, கணினி கணித வியல் மற்றும் புள்ளிவிவர அறிவி யல் பிரிவின் பேராசிரியர்கள் நீலிஷ் எஸ்.உபாத்யாயா, எஸ்.சுந்தர் ஆகி யோர் தலைமையிலான குழு இணைந்து இந்த ஆய்வை நடத்தி யுள்ளன. இதில் கடந்த வாரம் மட்டும் தில்லியின் ஆர்-வேல்யூ 2.1 என்றள வில் அதிகரித்துள்ளது. இதே கால கட்டத்தில் இந்தியாவின் ஒட்டு மொத்த ஆர்-வேல்யூவும் 1.3 என்ற அளவில் உள்ளது. இது தில்லியில் கொரோனா நான்காவது அலையின் ஆரம்பம் என்று யூகிக்க முடியுமா என்று கேட்ட தற்கு, ஐஐடி-சென்னையின் கணிதத் துறையின் உதவிப் பேராசிரியர் டாக்டர் ஜெயந்த் ஜா, மற்றொரு அலையின் தொடக்கத்தை அறி விப்பது மிக விரைவில் இருக்கும் என்றார். இப்போதைய ஆய்வின்படி, ஒவ்வொரு தொற்றாளரும் இருவ ருக்குத் தொற்றைக் கடத்துகின்றனர் என்பது மட்டுமே உறுதியானது. இப்போது மக்களிடம் எதிர்ப்பாற்றல் இருக்கிறதா என்று தெரியவில்லை. 2022 ஜனவரியில் ஏற்பட்ட மூன்றா வது அலையின் போது பாதிக்கப் பட்டவர்கள் இப்போது பாதிப்புக்கு உள்ளாகிறார்களா என்ற தரவுகள் இல்லை. தில்லியைத் தவிர மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற மற்ற பெருநகரங்களில் இன்னும் தொற்று கட்டுக்குள் தான் இருக்கிறது என் றார்.