சான்றிதழ் பதிவேற்ற கால அவகாசம்
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் (டிஎன்பி எஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலு வலர் சண்முக சுந்தரம் வெளியிட்ட அறிவிப்பில், “ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-குரூப் 4ல் உள்ள வனக்காவலர் மற்றும் வனக்காப்பாளர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்காக தேர்வர் களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டதில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் சில தேர்வர்கள் உரிய சான்றிதழ் களை சரியாக பதிவேற்றவில்லை என்பது கண்டறியப் பட்டுள்ளது. எனவே, இத்தகைய தேர்வர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக செப்.5 ஆம் தேதி இரவு 11.59 மணி வரை, விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதி வேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. உரிய சான்றிதழ் களை பதிவேற்றம் செய்யாத தேர்வர்களின் உரிமைகோரல், விண்ணப்பம் நிராகரிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.