சென்னை, டிச. 28 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்டக்குழு சார்பில் 362 தீக்கதிர் சந்தாக்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு (குடிசைமாற்று) வாரிய குடியிருப்புகளுக்கு அதிமுக அரசு 1.50 லட்சம் ரூபாய் முதல் சுமார் 7 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க அரசாணை வெளியிட்டிருந்தது. மார்க் சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத் தையடுத்து இந்த அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இந்த வெற்றிவிழா பொதுக்கூட்டம் திங்களன்று (டிச.27) கே.பி.பார்க்கில் நடைபெற்றது. கட்சியின் எழும்பூர் பகுதிக்குழு ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம், மாவட்டம் முழுவதும் முதல் தவணையாக சேகரிக்கப்பட்ட 362 சந்தாக்களுக்கான தொகை 4 லட்சத்து 720 ரூபாயை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வே.ஆறுமுகம் வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேஷ், பகுதிச் செயலாளர் கே.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.