tamilnadu

img

சமூகப் போராளி இளையபெருமாளுக்கு நூற்றாண்டு நினைவு அரங்கு

சென்னை, ஏப்.18- பட்டியலின மக்களின் முன் னேற்றத்துக்காக பாடுபட்ட எல். இளையபெருமாளுக்கு சிதம் பரத்தில் நூற்றாண்டு நினைவு அரங்கு அமைக்கப்படும் என்று  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின் அறிவித்தார்.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாயன்று(ஏப்.18) கேள்வி நேரம் முடிந்ததும், விதி எண் 110  இன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிக்கை ஒன்றை வாசித்  தார். அப்போது, “ஒடுக்கப்பட்ட  சமூக மக்களின் ஒளிவிளக்காக  மட்டுமல்ல; நெறிசார்ந்த அரசிய லின் அடையாளமாகவும் விளங் கிய அய்யா இளையபெருமாளின் நூற்றாண்டைப் போற்றும் வகை யில் இந்த அறிப்பை வெளியிடு வது என்னுடைய கடமையாக நான் கருதுகிறேன்”என்றார்.

உரிமை வாசலை திறந்தவர்

சமூக சீர்திருத்தத்தின் பெரு மைமிகு தலைவர்களான அயோத்தி தாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவ ராஜ், எல்.சி.குருசாமி, சுவாமி சக ஜானந்தர் ஆகியோர் வரிசையில்  கம்பீரமாக நின்று போராடியவர் களில் ஒருவர்தான் எல். இளைய பெருமாள்.  நந்தனை மறித்த சிதம்பரம் மண்ணில் பிறந்து, நாடு முழு வதும் பட்டியலின மக்களுக்கு அடைபட்டிருந்த உரிமை வாச லைத் திறந்தவர். பள்ளியில் படிக்  கும் போது இரட்டைப் பானை களை உடைத்தவர் என்றெல்லாம் புகழாரம் சூட்டிய முதலமைச்சர், ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்தபோது அங்கும் பாகுபாடு காட்டப்பட்டது. எனவே, ஓராண்டு காலத்திலேயே அந்தப் பணியில் இருந்து விலகி மக்கள் பணியாற்ற  வந்துவிடுகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

போராட்டத்தின் எழுச்சி

ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்டம் - தஞ்சை மாவட்டத்தில்  1940 முதல் 1970 வரையில் நடந்த  மிகப்பெரிய சமூகப் போராட்டங் களை நடத்தியவர் இளைய பெரு மாள். பட்டியலின மக்கள் மத்தி யில் எழுச்சி ஏற்பட இவரது போராட்டங்கள்தான் காரணம். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இளைய பெருமாள், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய  தீண்டாமை ஒழிப்புக் கமிட்டித்  தலைவராகவும் பணியாற்றியது டன் மூன்று முறை மக்களவைக்  கும் ஒரு முறை சட்டமன்றத்திற்கும் தேர்வு செய்யப்பட்டு மிக சிறப்பாக மக்கள் பணியாற்றியவர் என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.

முதல் விருது

பிற்காலத்தில் கொண்டு வரப் பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்  டத்துக்கு அடித்தளமே பெரியவர்  இளையபெருமாள் ஆணையத் தின் அறிக்கைதான். 1971 ஆம்  ஆண்டு அனைத்துச் சாதியினரும்  அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத் தைக் கொண்டு வருவதற்கும் கார ணமாக இருந்தார். 1998 ஆம்  ஆண்டில்  அம்பேத்கர் பெயரில்  தமிழ்நாடு அரசின் விருதை முதன்  முதலாக இளையபெருமாளுக் குத் தான் முதலமைச்சர் கலை ஞர் வழங்கினார். 1924 ஆம் ஆண்டு  ஜூன் 26 அன்று பிறந்த இந்த சமூ கப் போராளியைப் போற்றுவதை  இந்த அரசு தனது கடமையாகக் கருதுகிறது எனவும் தெரிவித் தார்.

சமதர்ம சமூகம் அமைப்போம்!

சமூக இழிவு களையப்பட வேண்டும்; சாதிய வன்முறை ஒடுக்கப்பட வேண்டும்; அனைத்து  சமூகங்களின் ஒற்றுமை உரு வாக்கப்பட வேண்டும்; ஒடுக்கப் பட்ட மக்களுக்கு சட்டரீதியான அனைத்து வாய்ப்புகளும் வழங் கப்பட வேண்டும்; சமத்துவ, சுய மரியாதைச் சமூகம் உருவாக்கப்  பட வேண்டும் என்ற உன்னத நோக்  கத்துக்காக உழைத்த இளைய பெருமாளின் தொண்டை சிறப்பிக்  கும் வகையில் கடலூர் மாவட்டம்,  சிதம்பரத்தில் நூற்றாண்டு நினை வரங்கம் ஒன்று அமைக்கப்படும் என்றும் தீண்டாமையை ஒழிக்க சாதி அமைப்பின் ஆணிவேரை வெட்டியாக வேண்டும். அதற்கு சாதிய அமைப்பின் பிடிப்பை  உடைத்தாக வேண்டும் என்ற  பெரியவர் இளையபெருமாள் வழியில் சுயமரியாதைச் சமதர்ம சமூகத்தை அமைப்போம் என்றும் முதலமைச்சர் கூறினார்.