tamilnadu

img

கலைஞர் பிறந்த நாள் அரசு விழாவாக இன்று கொண்டாட்டம்

சென்னை,ஜூன் 2- மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98 ஆவது பிறந்த நாளையொட்டி  சென்னை ஓமந்தூரார் அர சினர் தோட்ட வளாகத்திலுள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்து கிறார். திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் 98 ஆவது பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அவருக்கு சென்னையில்  சிலை நிறுவப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறி வித்தார். அதனை செயல்படுத்தும் வகையில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 16 அடியில் அமைக்கப்பட்ட வெண்கல சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மே 28 அன்று திறந்து வைத்தார். இந்த நிலை யில், கருணாநிதியின் பிறந்த நாளை யொட்டி வெள்ளியன்று (ஜூன்3) மாநிலம் முழுவதும் அரசுவிழா கொண்டாடப் படுகிறது.

இதையொட்டி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப் பட்டுள்ள கருணாநிதியின் சிலைக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 3) காலையில் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணி வித்து மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சர்கள், மக்கள வை, மாநிலங்களவை, சட்டமன்ற உறுப் பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலு வலர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். இதேபோன்று மாநிலம் முழுவதும் அரசுவிழா கொண்டாடப்படுகிறது. திமுக தரப்பில் மாவட்டந்தோறும் பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன் கருணாநிதி பிறந்த நாளை கொண்டாடு கின்றனர். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள். உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.