புதுதில்லி,மார்ச் 12- தேசிய பங்குச் சந்தை முறைகேட்டில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தலைவர் சித்ரா ராம கிருஷ்ணாவின் ‘இமயமலை சாமியார்’, அவரால் பணி நியமனம் செய்யப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியம் தான் என்று தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய தேசிய பங்கு சந்தை முறைகேட்டில் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆனந்த் சுப்பிரமணியம் சிபிஐ யால் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக செபி நடத்திய விசாரணையில் சித்ரா இமயமலையில் தங்கியுள்ள சாமியார் ஒருவரின் ஆலோசனையைக் கேட்டு முக்கிய முடிவுகள் எடுப்பது தெரிய வந்தது.
இந்த ஆலோசனைகள் அனைத்தும் இ-மெயில் மூலமே நடந்துள்ளது. சாமியாருக்கும் சித்ராவுக் கும் இடையே நடந்த 2,500 இ-மெயில் பரிமாற்றங்க ளை விசாரணை அமைப்பு கண்டுபிடித்துள்ளது. இமயமலை சாமியார் யார் என்பது குறித்து இருவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வந்த னர். இந்த விசாரணையின் முடிவில், சித்ரா கூறிய இமயமலை சாமியார் ஆனந்த் சுப்பிரமணியன்தான் என்பதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்து, தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதற்கிடையில் ஆனந்த் சுப்ரமணியன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதும் விசாரணை நடைபெற்றது. சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால், மார்ச் 24ஆம் தேதி தனது உத்தரவை அறிவிப்ப தாக கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.