அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மீதான சிபிஐ வழக்கு ரத்து
சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண் டும் என்ற நிபந்தனையுடன் இந்த உத்தரவு வழங்கப் பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு இந்தி யன் ஓவர்சீஸ் வங்கியிட மிருந்து பெற்ற 30 கோடி ரூபாய் கடனை சகோதர நிறு வனங்களுக்கு திருப்பி விட்ட தால், 22 கோடியே 48 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட் டதாக புகார் தெரிவிக்கப் பட்டது. இதனடிப்படையில் 2021 ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்யப் பட்டது. நீதிபதி டி.சக்கரவர்த்தி தனது தீர்ப்பில், “மொத்தம் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, அதில் 15 லட்சம் ரூபாயை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கும், 15 லட்சம் ரூபாயை தமிழ்நாடு சமரச தீர்வு மையத்திற்கும் செலுத்த வேண்டும்” என்ற நிபந்தனையுடன் வழக்கை ரத்து செய்துள்ளார். இந்த வழக்கில் மோசடி எதுவும் நடைபெறவில்லை என்றும், அரசு அதிகாரிகள் யாரும் சம்பந்தப்படவில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டு உள்ளார்.