tamilnadu

img

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு துபாயில் தலைமறைவாக உள்ள அதிமுக நிர்வாகி சஜீவன் நவ.5 இல் ஆஜராக சிபிசிஐடி சம்மன்

நீலகிரி,அக்.25- கோடநாடு  கொலை கொள்ளை வழக்கில் சேர்க்கப்பட்டு, துபாயில் தலைமறைவாக உள்ள அதிமுக நிர்வாகி சஜீவன் நவம்பர் 5 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அதிமுக மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவன். இவர் கூடலூர் அருகே அள்ளூரில் வனவிலங்குகளை வேட்டையாட கள்ளத்துப்பாக்கி வாங்கிக் கொடுத்ததாக இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தற்போது துபாயில் தலைமறைவாக உள்ள தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்கு சஜீவன் நவம்பர் 5 ஆம் தேதி கோவை சிபிசிஐடி அலு வலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.  சம்மனை சிபிசிஐடி போலீசார் கோவையில் உள்ள அவரது மனைவியிடம் வெள்ளியன்று வழங்கினர். தீவிர புலன் விசாரணை: சிபிசிஐடி இதனிடையே கோடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர்  புலன் விசார ணை தீவிரமாக மேற்கொண்டு வருவ தாக அரசு தரப்பு வழக்கறிஞர்  நீதி மன்றத்தில் தெரிவித்தார்.  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை யில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நீதிபதி அப்துல் காதர் பணி யிடை மாற்றம் செய்யப் பட்டுள்ளதால் குடும்ப நல நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடை பெற்று வருகிறது. இதில் இந்த வழக்கின் முக்கிய குற்ற வாளியாக கருதப்படும் சயான், வாளையார் மனோஜ் ஆகி யோர் அக்டோபர் 25 அன்று நேரில் ஆஜராகினர். குடும்ப நல நீதிமன்ற நீதிபதி லிங்கம் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், இண்டர்போல் விசாரணை மற்றும் புலன் விசாரணை நடைபெற்று வருவது குறித்து நீதிபதியிடம் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் விளக்கினர். இதைத் தொடர்ந்து வழக்கின் விசார ணையை நவம்பர் 29 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.