பெங்களூரு, ஆக. 16 - காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கக் கூடாது என கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு, பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை கடிதம் எழுதியுள்ளார். என்ன ஆனாலும், இந்த விஷயத்தில் முதல்வர் சித்தராமையா உறுதியாக இருக்க வேண்டும் என்றும் பொம்மை அந்த கடிதத்தில் கூறியுள்ளார். அந்தக் கடிதத்தில் பசவராஜ் பொம்மை கூறியிருப்பதாவது:
“காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மீண்டும் ஒரு நிலைப்பாட்டை எடுத்து இருப்பதை கவனித்தி ருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதேநேரம் தமிழ்நாடு அரசு காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதை ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டோம். அடுத்தடுத்து வரும் முக்கியமான நகர்வுகளை கருத் தில் கொண்டு எதிர்வரும் நாட்க ளில் சட்ட நடவடிக்கை எடுப்பதற் காக இந்த கடிதத்தை எழுதுகி றேன். கடந்த ஜூன் 1 அன்று கர்நாட காவில் உள்ள நான்கு நீர்தேக் கங்களில் ஒட்டுமொத்தமாக 243 டிஎம்சி தண்ணீர் இருப்பு இருந்தது. ஆனால், கடந்த ஆகஸ்ட் 8 அன்று, தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர் அணையில் 69.77 டிஎம்சி தண்ணீ ரும், பவானி சாகர் அணையில் 16 டிஎம்சி தண்ணீரும் உள்ளது. பிலிகுண்டுலு வழியாக தமிழ் நாட்டிற்கு 14.54 டிஎம்சி தண்ணீர் சென்று உள்ளது. நடப்பாண்டில் மட்டும் 83 டிஎம்சி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வழங்கப்பட்டு உள் ளது. தமிழ்நாட்டில் 1 லட்சத்து 80 ஆயி ரம் ஏக்கர் குறுவை சாகுபடிக்கு 32 டிஎம்சி தண்ணீர் தேவைப்படு கிறது. ஆனால், கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதியுடன் குறுவை சாகு படிக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த அளவை காட்டிலும் இரண்டு மடங்கு, அதா வது 60.97 டிஎம்சி தண்ணீரை தமிழ் நாடு பயன்படுத்தி உள்ளது.
காவிரி படுகையில் தண்ணீர் பற்றாக்குறையை கண்டுகொள்ளா மலும், நீர் பங்கீடு அளவு உத்தரவை மீறியும், நான்கு பகுதிகளில் உள்ள குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு நமது அதிகாரிகள் காவரி நீர் மேலாண்மை ஆணையத்தில் எதிர்ப்பு தெரிவிக்காதது மாநில நல னுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தற்போது கர்நாடகத்தின் நான்கு அணைகளின் நீர்மட்டம் பெங்களூரு நகரம், நகரங்கள் மற்றும் காவிரி படுகையில் உள்ள கிராமங்களின் குடிநீருக்கு போது மானதாக இல்லை. அதேபோல், காவிரி படுகையில் உள்ள காரீப் பயிர்கள் நைட்ரஜன் பற்றாக்குறை யால் பாதிக்கப்படும்.
இந்த நிலையில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் கர்நாடக மக்க ளின் குடிநீர் மற்றும் விவசாயத் திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற் படும். எனவே, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் தமி ழகத்திற்கு தண்ணீர் திறக்க முடி யாது என்பதில் உறுதியாக இருக்கு மாறு தங்களை கேட்டுக்கொள்கி றேன்.” இவ்வாறு பசவராஜ் பொம்மை தனது கடிதத்தில் தெரிவித்து உள் ளார். காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசையும், அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமாரையும், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டா லின் கண்டிக்க மனமில்லாமல் இருப்பதாகவும், இந்த விவகா ரத்தில், தமிழ்நாட்டின் திமுக அரசு துரோகம் செய்து விட்டதாகவும், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலை வர் அண்ணாமலை குற்றம் சாட்டி யிருந்தார். பெங்களூருவில் கடந்த மாதம் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட் டம் நடந்தபோது, அந்தக் கூட்டத் தில் கலந்து கொள்ள மு.க. ஸ்டா லின் பெங்களூரு செல்லக் கூடாது என்றும், அப்படி அவர் சென்றால் தமிழ்நாடு வரும்போது, ‘கோ பேக் ஸ்டாலின்’ சொல்லி, கருப்பு பலூன்களை பறக்க விடுவோம் என கூப்பாடு போட்டிருந்தார். இந்நிலையில்தான், கர்நாடக பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை, தமிழ்நாட்டிற்கு தண் ணீர் தரக்கூடாது என எழுதியிருக் கும் கடிதம், காவிரி விவகாரத்தில் பாஜக இரட்டை வேடத்தை வெளிச் சம் போட்டுள்ளது.