tamilnadu

img

தமிழ்நாடு- கர்நாடகம் இடையே மோதலை உருவாக்கும் காவிரி மேலாண்மை ஆணையம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு கூட்டம் ஆகஸ்ட் 11,12 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவிலில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தையொட்டி செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

2024 மக்களவைத் தேர் தல் பணிகளை துவக்குவது தொடர்பாகவும், தற்போது உருவாகியுள்ள இந்  தியா என்கிற மகத்தான கூட்டணி யை தமிழகத்தில் செயல்படுத்தி 40 தொகுதியிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான பாஜகவை தோற்கடிக்க மேற் கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. 

நகைப்புக்குரிய நடைபயணம்

பாஜக தலைவர் அண்ணா மலை தமிழகத்தில் நடைபய ணத்தை மேற்கொண்டுள்ளார். அந்த நடைபயணம் ஒரு நகைப் புக்குரிய நடைபயணமாக உள ளது. நீண்ட தூரம் நடைபயணம் நடப்பது வேறு ஒரு நாளைக்கு எட்டு கிலோமீட்டர் நடந்துவிட்டு 100 கிலோ மீட்டர் வாகனத்தில் செல்  வது என்ன நடைபயணம் என புரிய வில்லை 234 தொகுதியிலும் நடப்ப தாக சொல்லி இதற்காக 200 கோடி ரூபாய் கார்பரேட்டுகள் தாரை வார்த்து அந்த நடை பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இதனால் எந்தபலனும் ஏற்படப் போவதில்லை. பாஜக - அதிமுக கூட்டணியில் இன்னும் சண்டை சச்  சரவுகள் தீர்ந்த பாடில்லை. எனவே  இவர்களின் நடைபயணம் பகல் கன வாகத் தான் போகும்.

நாங்குநேரி கொடூர தாக்குதல்

நாங்குநேரியில் சிறுவன் தாக்  கப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கிக் கொண்டு இருக்கிறது. இதுபோன்ற சாதிய ஆணவ மனோ பாவங்களுடன் செயல்படுகின்ற யாராக இருந்தாலும் . தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேல் பாதியில் கோவில்  மூடப்பட்டு 3 மாதங்கள் ஆகிறது.  இன்றளவும் திறக்கப்படவில்லை  பட்டியல் இன மக்கள் கோவிலுக் குள் போக முடியவில்லை. அதே போன்று வேங்கை வயலில் குற்ற வாளிகள் இன்றளவும் கைது செய்  யப்படவில்லை.இவை அனைத்  தும் அடுத்த அடுத்த சம்பவங்க ளுக்கு ஊக்குவிக்கும் நிலை ஏற்படு கிறது. உடனடியாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

பொதுபாடத்திட்டம் 

பல்கலைக் கழகங்களே பாடத்  திட்டங்களை உருவாகிக் கொண்டி ருந்தன. தற்போது பொது பாடத்  திட்டத்தை அரசு கொண்டுவந்துள் ளது. பல்கலை கழங்கள் துவங்கிய  காலம் முதலே அவர்கள்தான் பாடத் திட்டங்களை உருவாக்கி கொண்டிருந்தனர். தற்போது பல்கலைக் கழகங்கள் இடமும்,  ஆசிரியர்கள் இடமும் ஆசிரியர்  அமைப்புளுடனும் முறையாக பேசாமல் யாரிடமும் கருத்து கேட்  காமல் திடீரென பொது பாடத் திட்டத்தை கொண்டுவருவது பொருத்தமற்றது. இந்த முடிவை தமிழக அரசு மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். யாரிடமும் கருத்து கேட்காமல் பொது பாடத் திட்டம் கொண்டுவருவது பல சிக்  கல்களை உருவாக்கும். எனவே பொது பாடத்திட்டத்தை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

அதானி துறைமுகம்

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் அதானியின் துறைமுகம் ஆரம்பிக்கும் பணி கள் நடைபெற்று வருகிறது. சுமார்  3500 ஏக்கருக்கு மேலாக இடம்  அவர்களுக்கு நிலம் கையகப் படுத்தி கொடுக்கப்படுகிறது. கட லில் மண்ணை கொட்டி மூடுகின்ற நிலை ஏற்படுகிறது. இதனால் கடல்  பிரதேசம் பாதிக்கப்படும். மீன வர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் படும். சுற்றுச்சூழல் பாதிக்கும் என்  பதை விட சென்னையில் உள்ள  சென்னைத் துறைமுகம். எண்ணூர்  பொதுத்துறை துறைமுகங்கள் பாதிக்கப்படும். அரசின் இரண்டு துறைமுகங் கள் செயல்படும் போது அதானிக்கு ஏன் தனியாக துறைமுகம். விவசாயி கள், மீனவர்கள் அனைவரையும் அப்புறப்படுத்திவிட்டு இதை செய்ய வேண்டுமா? அதானி துறை முகம் வந்தால் அரசின் இரண்டு துறைமுகங்களும் மூட வேண்டிய நிலை ஏற்படும். தற்போது துறை முகங்கள் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு விதமான பொருட்களை கடத்தி வரும் இடமாக மாறியுள் ளது. குஜராத்தில் உள்ள அதானி துறைமுகம் வழியாக பல கோடி  ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் நம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. எனவே காட்டுப்பள்ளி யில் அதானி துறைமுகம் அமைப்ப தற்கு தமிழக அரசு அனுமதி அளிக்  கக் கூடாது.

மோதலை ஏற்படுத்தும் காவிரி மேலாண்மை ஆணையம்

காவிரி மேலாண்மை ஆணை யம் அரசியல் அடிப்படையில் செயல் படுகின்ற ஆணையமாக மாறியுள்ளது. கர்நாடகாவில் அணைகள் நிரம்பி போதுமான தண்ணீர் உள்ள சூழ்நிலையில் அவர்கள் கொடுக்க வேண்டிய தண்  ணீரை கர்நாடக அரசே கொடுக்க லாம் கொடுக்காமல் இருப்பது முத லில் தவறு. உச்சநீதிமன்றம் கொடுத்  துள்ள ஆணையின் படி தண்ணீரை பெற்று கொடுப்பதுதான் காவிரி மேலாண்மை ஆணையத்தின் வேலை. கர்நாடகத்திற்கும் தமி ழகத்திற்கும் ஒரு மோதல் வரட்டும் என பார்க்கின்றனர். இரண்டு மாநில  அரசும் ஒரே கூட்டணியில் இருப்ப தால் ஒரு மோதலை உருவாக்க தமிழகத்தை வஞ்சிக்கும் வேலை யை காவிரி மேலாண்மை ஆணை யம் செய்கிறது. இது சரியான போக்  கல்ல என்பதை மார்க்சிஸ்ட் கட்சி  சார்பில் தெரிவித்துக் கொள்கின் றோம்.

மனதில் பட்டதை  பேசும் ஆளுநர்

ஆளுநர் ரவி மனதில் பட்டதை எல்லாம் பேசி வருகிறார். இது அவ ருக்கு தேவையில்லாத ஒன்று. ஆளுநர் ரவி ஒரு அரசியல்வாதி போல் பேசி வருகிறார் அதை எப்  படி அனுமதிக்க முடியும். திரு வண்ணாமலை கிரிவல பாதையில் அசைவ உணவகங்கள் இருந்தால் அவருக்கு என்ன பிரச்சனை. திரு வண்ணாமலை நகரத்திலே அசை வம் இருக்க கூடாதா எனவும் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி னார். பேட்டியின் போது கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாநிலக்குழு உறுப்பி னர் அ.சவுந்தரராசன், மாநிலக்  குழு உறுப்பினர் ஆறுமுகநயி னார், மாநில கண்ட்ரோல் குழு  உறுப்பினர் இ.சங்கர், மாவட்டச செயலாளர் பாரதி அண்ணா உள் ளிட்டோர் உடனிருந்தனர்.