tamilnadu

img

காவிரியில் தண்ணீர் : கர்நாடகம் கைவிரிப்பு

பெங்களூரு, செப். 13 - காவிரியில் தமிழ்நாட்டி ற்கு தண்ணீர் திறந்துவிடும் விவகாரம் தொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்த ராமையா, புதனன்று பெங்க ளூருவில் அனைத்துக் கட்சி  கூட்டத்தைக் கூட்டி ஆலோ சனை நடத்தினார். அதன்பின்னர் செய்தி யாளர்களுக்கு அவர் பேட்டி யளித்தார். அப்போது,  “மழை இல்லாததால் கர்நாட கம் தண்ணீர் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடும் சூழ்நிலையில் கர்நாடகா இல்லை. இந்த விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தை நாட நாங்கள் முடிவு செய்துள்ளோம். மேலும், காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவிடம் மனு அளிக்கவும் உள் ளோம். கர்நாடகத்தின் நீர்  தேவையை பூர்த்தி செய்வ தற்கே 70 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், எங்களிடம் 53 டிஎம்சி தண்ணீர் மட்டும் உள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடி யாது” என்று கைவிரித்தார்.