மதுரை, ஜூலை 31- மதுரை கடச்சனேந்தல் அருகில் உள்ள அந்தநேரி பகுதியில் வசிக்கும் காட்டு நாயக்கர் சமூக மக்களை இழி வாகப் பேசிய அதிகாரி மீது நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இங்கு வசிக்கும் காட்டு நாயக்கர் சமூக மக்களுக்குச் சாதிச் சான்றிதழ் வழங்குவதில் தொடர்ந்து பிரச்சனை கள் உள்ளது. இருப்பினும் அதிகாரி கள் ஆய்வு செய்து அவ்வப்போது சாதிச் சான்றிதழ் வழங்கிவருகின்றனர். இந்த நிலையில் சென்னையி லிருந்து பாலமுருகன் என்பவர் சாதிச் சான்றிதழ் தொடர்பான விசாரணைக்கு வந்துள்ளார். அப்போது அவர், பழங்குடியினச் சமூ கம் என்றால் மேலாடை அணியக் கூடாது; நீங்கள் மேல் சட்டைகள் அணிந்து உள்ளீர்கள்; உங்களுக்குச் சாதிச் சான்றிதழ் தர முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் கொதிப்படைந்த மக்கள், நாகரீக காலத்தில் இப்படிப் பேசுவது சரியல்ல; மன்னிப்புக்கேட்க வேண்டு மென அதிகாரியிடம் கூறியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் பாலமுருகனைச் சம்பவ இடத்திலிருந்து அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து காட்டு நாயக்கர் சமூக மக்கள், அதிகாரியின் நாகரீக மற்ற பேச்சைக் கண்டித்துத் திங்க ளன்று ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத் தில் பங்கேற்றவர்கள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் இருவரும் சம்மந்தப்பட்ட அதிகாரி பாலமுருகன் மீது நட வடிக்கை எடுக்கவேண்டும். எங்கள் சமூக மக்களுக்குத் தாமதமின்றிச் சாதிச்சான்றிதழ் வழங்கவேண்டுமென வலியுறுத்தினர்.