கோவை, ஜன.31- மகாத்மா காந்தி நினைவுநாளில் கோவை யில் அஞ்சலி செலுத்திய 23 பேர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறி கூட்டம் கூடிய தாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை, சிவானந்தா காலனியில், கோவை மக்கள் ஒற்றுமை மேடை சார்பில், மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பி னர் சி.பத்மநாபன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட மார்க்சிய, பெரியாரிய அம்பேத் கரிய அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற னர். முன்னதாக, காவல்துறையின் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட பிறகே இந்நிக ழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இருப்பினும் காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவின் விசுவாசிகளாக உள்ள சில காவலர்கள் இந்நிகழ்வை திட்டமிட்டபடி நடைபெறாமல் இருக்க பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி னர். மேலும், உச்சத்துக்கே சென்ற காவல் துறையினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசிக் கொண்டிருந்த ஒலிவாங்கியை (மைக்) பிடுங்கச் சென்றனர். இதன் காரணமாக இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போலீசாருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் மதவெறியர்களால் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார் என்கிற வாசகத்தை அகற்றியே ஆகவேண்டும் என காவல்துறையினர் பிடிவாதமாக இருந்தனர். இதனையடுத்து சில சமரசங்களுக்கு பின்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப் பட்டது. போலீசாரின் இத்தகைய நடவடிக்கை பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
பல்வேறு தலைவர்கள் போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரி வித்து கண்டன அறிக்கையை வெளியிட்ட னர். இந்நிலையில், காவல் துறையினர் தங்களை நியாயவாதிகளாக காட்டிக் கொள்ள அஞ்சலி செலுத்த வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்ட 23 தலை வர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் பறக்கும்படை அலுவலர் சுரேஷ் குமாரிடம் ரத்தினபுரி காவல்நிலையத்தினர் புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்துள்ள னர். இதில், தேர்தல் விதிமுறையை மீறி கூட்டம் கூடியதாகவும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாகவும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.