சென்னை, பிப்.21 திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச் சர் ஜெயக்குமார் உள்பட 40 அதிமுகவினர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வார்டு தேர்தல் அமைதியாக நடந்தபோதிலும் ஒரு சில இடங்களில் சிறு சிறு மோதல் கள் ஏற்பட்டன. ராயபுரம் 49- வது வார்டில் உள்ள சஞ்சீவ ராயன் கோவில் தெரு வாக் குச்சாவடியில் திமுக- அதி முகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலின்போது திமுக பிரமுகர் நரேஷ் தாக் கப்பட்டார். அவரை அதிமுக வினர் போலீசில் ஒப்படைத்த னர். இந்த சம்பவம் தொடர் பாக ராயபுரம் போலீசார் விசா ரணை நடத்தினார்கள். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள் பட 40 அதிமுகவினர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.