சென்னை, மார்ச் 15 - புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி செவ்வா யன்று (மார்ச் 15) தமிழகம் முழுவ தும் 44 மையங்களில் ஓய்வூதி யர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய ராஜஸ்தான் மாநில அரசு முடிவெடுத்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி, 1.4.2003 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டும். தற்காலிக பணிக்காலத்தில் வாங்கிய ஊதியத்தில் பாதித் தொகையை சேர்த்து ஓய்வூதியம் நிர்ணயம் செய்யப்படும் என்று தமிழக அரசின் உத்தரவை வாரி யம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. எனவே, ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து 2003 ஆம் ஆண்டுக்கு முன்பும், பின்பும் பணி நியமனம் பெற்று, ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூ திய திருத்தம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பினை அமல்படுத்த வேண்டும்.
விதவை, விவாகரத்தான மகள், ஊனமுற்றோர் ஆகியோ ருக்கு வழங்கப்பட்டு வந்த குடும்ப ஓய்வூதியம் நிறுத்தப் பட்டதை திரும்ப வழங்க வேண்டும், 70, 75 வயது முழுமை யடையும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் இந்தப் போராட்டம் நடை பெற்றது. இதன் ஒருபகுதியாக சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை யகம் முன்பு வடசென்னை, தென்சென்னை மண்டல கிளைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வடசென்னை மண்டலச் செயலாளர் எஸ்.கணேசன் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணி யம், பொதுச் செயலாளர் எஸ்.ஜெ கதீசன், பொருளாளர் ஏ.பழனி, துணைபொதுச் செயலாளர்கள் எம்.பாலசுப்பிரமணி, ஆர்.ராமநா தன், இணைச் செயலாளர்கள் கே.ஆர்.முத்துசாமி, கே.நடரா ஜன், துணைத் தலைவர்கள் என்.தீரமணி, முகவை கி.பெருமாள், தென்சென்னை மண்டலச் செயலாளர் ஆர்.ராஜாமணி உள்ளிட்டோர் பேசினர்.