tamilnadu

img

வண்ணக்கதிர் - அறிவியல் கதிர் - ரமணன்

பகல் கனவு வீணல்ல

கண்களை மூடி ஓய்வு எடுக்கும் ‘அமைதி விழிப்பு’ (silent waking) நிலையில் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை எலிகளில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு காட்டுகிறது. எலிகள் அமைதியான விழிப்பு நிலையில் இருக்கும்போது அவற்றின் மூளையில் உள்ள காட்சிப் பகுதி நரம்புகளின் செயல்பாட்டை ஆய்வாளர்கள் கண்காணித்தனர். இதற்குமுன் ஒரு பொருளைக் காணும்போது ஏற்பட்ட மின் அதிர்வு வகமையை மூளையின் நரம்புகள் இப்போதும் வெளிப்படுத்தின. எலிகள் அந்தப் பொருள் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறது அல்லது பகல் கனவு காண்கிறது என்பதை இது காட்டுகிறது. மேலும் முதல்  சில நாட்களுக்கு தோன்றும் வகமை, பின்னால் அந்த  பிம்பம் குறித்து மூளையின் எதிர்வினை எவ்வாறு இருக்கும் என்பதையும் தெரிவிக்கிறது. நாம் பார்க்கும் பொருட்கள் குறித்து மூளையின் எதிர்கால வினை  பகல்கனவின் மூலம் உருவாக்கப்படலாம் என்பதற் கான தொடக்க கட்ட ஆதாரங்களாக இவை உள்ளன.  இவை மேலும் பல ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப் படுத்தப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் எச்ச ரிக்கின்றனர். புதிய அனுபவங்களுக்கு எதிர்வினை ஆற்றக்கூடிய வகையில் தன்னை தகவமைத்துக் கொள்ளும் பிளாஸ்டிசிட்டி எனப்படும் மூளையின் சக்தியில் பகல் கனவும் ஒரு பங்கு வகிக்கிறது என்ப தற்கான குறிப்பாக இந்த ஆய்வின் முடிவு உள்ளது.

விலாங்கு மீன்களின் மின்சாரம் மரபணு மாற்றங்களை  நிகழ்த்துமா?

சாதாரணமான நிலையில் உயிரினங்களின் செல்களின் மேல் உள்ள கொழுப்பு உறை  அந்நிய மூலக்கூறுகள் நுழைய இயலாத வாறு தடுக்கின்றன. ஆனால் செல்கள் மீது  மின் அலைகளை செலுத்தும்போது அவற்றின் மேல் சவ்வுகள் சிதைவுற்று தற்காலிக துளைகள் உண்டாகின்றன. இவற்றின் வழியாக அந்நிய மூலக்கூறுகள் உள்நுழைகின்றன. இந்த முறை எலெக்ட்ரோபொரேஷன் (electroporation) எனப்படுகிறது. 1980களிலிருந்து மருந்துப் பொருட்களை செல்களினுள்ளே செலுத்த இம்முறை பயன்படுத்தப்படுகிறது. பின்னர் டிஎன்ஏ துண்டுகளும் இதன் மூலம் செல்களினுள் அனுப்பப்பட்டன. செல்களைப் போலவே உயிரினங்களும் தங்களை சுற்றியுள்ள நீரில்  விடப்பட்ட டிஎன்ஏ துண்டுகளை மின் அலை கள் மூலம் உட்கிரகித்து மரபணு மாற்றம் பெறலாம். விலாங்கு மீன்(eel) மற்றும் சில விலங்கி னங்கள் தங்கள் உடலிலிருந்து மின்சா ரத்தை விடுவிக்கின்றன. இது இயற்கையில் நடக்கும் மரபணு மாற்றங்களை பாதிக் கின்றதா என்பதை ஒரு பரிசோதனை மூலம் கண்டிருக்கின்றனர் நகோயா பல்க லைக்கழகத்தை சேர்ந்த மூலக்கூறு உயி ரியலாளர் அட்சுவோ லிடா மற்றும் அவரது  குழுவினர். ஒரு தொட்டியில் ஸீப்ரா வகை மீன் குஞ்சுகளும் ஒளிரும் புரதத்திற்கான மரபணு கொண்ட ஜீன்களும் விடப்பட்டன. பின் அதனுள் எலெக்ட்ரிக் ஈல் ஒன்றும் விடப்பட்டது. அதன்முன் இரை ஒன்று  தொங்கவிடப்பட்டு மின்சாரம் வெளியிட தூண்டப்பட்டது. இன்னொரு தொட்டியில் எலெக்ட்ரிக் ஈல் இல்லாமல் மீன் குஞ்சு களும் ஒளிரும் புரத ஜீன் மட்டும் வைக்கப்  பட்டது. எலெக்ட்ரிக் ஈல் இருந்த தொட்டி யில் 5% ஸீப்ரா மீன் குஞ்சுகளில் பச்சை வண்ணம் கொண்ட திசுக்கள் வளர்ந்தன. இரண்டாவது தொட்டியிலிருந்த மீன்  குஞ்சுகளில் ஒளிரும் திசுக்கள் காணப்பட வில்லை. “எலெக்ட்ரோபொரேஷன் முறையில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களில் வெளிவரும் மின்சாரத்துடன் ஒப்பிடும் போது ஈல்கள் வெளிவிடும் மின்சாரம் வேறு பட்ட அதிர்வு வடிவமும் நிலையற்ற அழுத்த மும் கொண்டது என்றாலும் எலெக்ட்ரிக்  ஈல் விடுவித்த மின்சாரம், தொட்டியிலிருந்த ஜீன்களை ஸீப்ரா மீன் குஞ்சுகளின் செல்களுக்குள் மாற்றுகிறது என்று இது காட்டுகிறது” என்கிறார் லிடா. இதற்கு முன் பேக்டீரியாக்கள் இந்த முறையில் உயிரி எதிர்ப்பு மருந்துகளை தடுக்கும் மரபணு மாற்றங்களை பெறு வது அறியப்பட்டிருந்தது. இது கிடைமட்ட மாற்றம் எனப்படுகிறது. ஆனால் பல செல்  உயிரினங்கள் இந்த முறையில் ஜீன் மாற்றம்  பெறுவது அண்மைக்காலம் வரை அறி யப்படவில்லை. தற்போது டார்டிகிரேட் எனும் நுண்ணிய உயிரினத்திற்கும் பூஞ்சை களுக்கும் இடையிலும் ஈக்களுக்கும் தாவ ரங்களுக்கும் இடையிலும் இப்படிப்பட்ட ஜீன் மாற்றங்கள் நடைபெறுவது தெரிய  வந்துள்ளது. இதன் மூலம் ஈக்கள் களைக்  கொல்லிகளிடமிருந்து தப்பிக்கின்றன. விலங்கினங்களுக்கும் நுண்ணுயிரி களுக்கும் இடையில் நடைபெறும் ஜீன் மாற்றத்தில் குடல் முக்கிய இடம் ஆகும். சோதனைச்சாலைக்கு வெளியே எலெக்ட்ரிக் ஈல் மூலம் ஜீன் மாற்றம் நடை பெறுவது இன்னும் உறுதிப்படவில்லை. ஒரு சில உயிரினங்களே மின்சாரத்தை விடு விக்க இயலும் என்பதால் இந்த நிகழ்வு இயற்கையில் நடைபெருவது அரிதே. படி நிலை வளர்ச்சியின் அறிவியலில் இது  மேலும் அதிக நுட்பங்களை சேர்ப்பது ஒரு புறம். இன்னொரு புறம் உயிரினங்களின் சிக்கலான அமைப்பை புரிந்துகொள்ளவும் உதவும் என்று கூறுகிறார் லிடா. இந்த ஆய்வு பீர்ஜெ(peerj) என்கிற இதழில் வெளிவந்துள்ளதாம்.

அழகியலா பாதுகாப்பா?

சீனப் பெருஞ்சுவர் உலக அதிசயங்களுள் ஒன்று. பலர்  நினைப்பது போல சீனப் பெருஞ்சுவர் ஒரே சுவர் அல்ல. சீனாவின் வட எல்லையை பாதுகாப்பதற்காக கட்டப்பட்ட தொடர்ச்சியான கோட்டைகள், கொத்தளங்கள், கோபுரங்கள் அடங்கிய சிக்கலான தொகுப்பு. அதுவும் பல நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது. அதைப் பேணி சீரமைக்கும் பணிகள் தொடர்ச்சி யாக நடைபெற்றுக் கொண்டிருப்பதால் எதிர்கால தலைமுறை களும் இந்தக் கட்டிடக் கலை அற்புதத்தை கண்டு வியப்புற இய லும். இதுதொடர்பாக வரலாற்று சின்னங்கள் மீது உயிரி பட லங்களின் தாக்கம் குறித்து அண்மையில் சீனா, அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் கூட்டு ஆய்வு நடத்தியுள்ளார்கள். சுவர்கள், பாறைகள் போன்ற தாதுப்பரப்பில் வளரும் கிளிஞ்சல்கள், பேக்டீரியாக்கள், பூஞ்சைகள், பாசி, சிறிய தாவ ரங்கள் ஆகியவை உயிரிப் படலம் எனப்படுகிறது. இவை வர லாற்று சின்னங்களின் நிலைத்தன்மைக்கு ஊறுவிளை விக்கக்கூடியவையா அல்லது அவற்றின் வாழ்நாளை அதி கரிக்கின்றனவா என்கிற விவாதம் எழுந்துள்ளது. ஆய்வுக்குழுவானது 600கி மீ தொலைவுக்கு பெருஞ் சுவரை ஆய்வு செய்தது. குறிப்பாக வறட்சியான பகுதிகளில் உயிரிப் படலம் என்ன நிலமைகளில் தாக்கம் செலுத்தும் என்பதை ஆய்வு செய்தது. சுவர் கட்டப் பயன்பட்ட களிமண் முதற்கொண்டு மணல், கூழாங்கல் ஆகிய கட்டுமானப் பொருட்களை பரிசோதித்ததில் கோபி பாலைவனம் போன்ற வறண்ட பகுதிகள் உட்பட பல்வேறு சூழல் நிலமைகளையும் பெருஞ்சுவர் தாக்குப் பிடிக்கக்கூடியது என்று தெரிய வந்துள்ளது. கெட்டிபடுத்தப்பட்ட மண் கொண்டு கட்டப்பட்ட பழைய பகுதிகளில் உயிரிப் படலம் காணப்பட்டது. சுவர் மீது படிந்திருக்கும் கிளிஞ்சல்களும் பாசிகளும் பெருஞ்சுவரை ரசிக்கும் அழகுணர்வை பாதிக்கலாம். ஆனால் அவற்றின் காப்பரண் தன்மைக்கும் அழகியலுக்கும் இடையில் எவ்வாறு சமன்படுத்துவது என்று ஆய்வாளர்கள் ஆலோசித்து வருகிறார்கள். காலநிலை மாற்ற சவால்கள் உள்ள இந்தக் காலத்தில் உலகின் மிகப்பெரும் கட்டிட பொக்கிஷங்களை காப்பாற்றுவதற்கு எதிர்கால சந்ததிகள் இந்த சமரசத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.