tamilnadu

img

போக்குவரத்துக் கழகங்களை பாதுகாக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கக்கோரி பிரச்சாரம்

சிவகங்கை, மார்ச் 10- அரசு போக்குவரத்துக் கழகங்களை பாதுகாக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் . ஓய்வு பெற்ற வர்களுக்களின் கோரிக்கை களுக்கு தீர்வு காண வேண் டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழக தொழிலாளர் சம்மேளனத்தின்(சிஐடியு) சார்பில் சிவகங்கை மாவட் டத்தில் இரு சக்கர வாகனப் பிரச்சார இயக்கம் நடந்தது.  சிஐடியு மாவட்ட தலை வர் வீரையா பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.  மத்திய சங்கத்தின் பொரு ளாளர் தியாகராஜன், அரசு போக்குவரத்துக் கழக காரைக்குடி மண்டல பொ துச்செயலாளர் தெய்வீர பாண்டியன், சிஐடியு மாவட்ட செயலாளர் சேது ராமன், சாலைப் போக்கு வரத்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் தெட்சிணா மூர்த்தி ஆகியோர் பேசினர்.  சிவகங்கை பேருந்து நிலையம், சிவகங்கை பணி மனை முன்பு நடந்த பிரச்சாரத்தில் ஜான்பீட்டர், தங்கத்துரை, கேசவன், முருகையா ஆகியோர் பேசி னர். காளையார்கோயில், தேவகோட்டை, காரைக்குடி யில் பிரச்சாரம் நடந்தது. நாகராஜன், மோகன், ஆரோக்கிய ராஜ்,ஜெய பால்,ஆட்டோ சங்க குமாரவேல், ஆகியோர் பேசினர். திருப்பத்தூர் பேருந்து நிலையம், பணி மனையில் பிரச்சாரம் நடந் தது.பிரச்சாரத்தை சிஐடியு மாவட்ட செயலாளர் சேது ராமன் முடித்துவைத்து பேசி னார். மேலூரில் உற்சாக வரவேற்பு    மதுரை மேலூர் பேருந்து நிலையம் அருகில் பிரச்சாரக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.  மத்திய சங்கத்தின் தலைவர் பி.எம் அழகர்சாமி உரையாற்றினார். சிஐடியு தாலுகாத்  தலைவர் எஸ். பி.மணவாளன் வாழ்த்திப் ்பேசினார். மத்திய சங்க பொதுச் செயலாளர் கனக சுந்தர், சிபிஎம் தாலுகா செயலாளர் எம். கண்ணன், சிஐடியு  நிர்வாகி பிரான் மலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.