tamilnadu

மாற்றுத்திறனாளிகளுக்காக பணியாற்றியவர்களுக்கு விருது அக்.30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்காக பணியாற்றியவர்களுக்கு விருது அக்.30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

நாகர்கோவில்,அக்.9- உலக மாற்றுத்திறனாளிகள் தினமான 03.12.2025 அன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் நிறுவ னங்கள் ஆகியன தேர்வு செய்யப்பட்டு,  தமிழ்நாடு முதல மைச்சரால் விருதுகள் வழங்கப்படவுள்ளது. அதன்படி  மாற்றுத்திறனாளிகளில் சிறந்த பணியாளர்/சுயதொழில் புரிபவர்களுக்கு மாநில அளவில் 10 விருதுகளும், பார்வைத் திறன் மற்றும் செவித்திறன் குறைபாடு உடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்குக்கான ஹெலன் கெல்லர் விருது, சிறந்த ஆசிரியர்  (அறிவுசார் குறைபாடுடையோருக்கு கற்பித்தல்), சிறந்த சமூகப் பணி யாளர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த  தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் செவித்திறன் குறையுடை யோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர் ஆகியோருக்கு தலா 1 விருதுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக  பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர், பொதுக் கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியோருக்கு தலா 2 விருதுக ளும் வழங்கப்படும். விருது ஒன்றுக்கு 10 கிராம் எடை யுள்ள தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட வுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. மேற்காணும் விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விருதாளர்கள், https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் 30-10-2025 அன்று பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வலைத்தளத்தில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவித்துக் கொள் ளப்படுகிறது. மேலும், விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை 30-10-2025 அன்று பிற்பகல் 5 மணிக்குள் கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலு வலரிடம் ஒப்படைக்குமாறும்  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.