கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மனு
சென்னை, மார்ச் 17 - புதியவர்களுக்கு கேபிள் டிவி ஒளிபரப்பு உரிமம் வழங்கு வதை தடுக்க கோரி திங்களன்று மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களிடம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மனு அளித்தனர். இதன் ஒரு பகுதியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வெள்ளைச்சாமி தலைமையில், துணைத் தலைவர் டி.டி.எம்.பாபு உள்ளிட்ட ஆபரேட்டர்கள் மனு அளித்தனர். அம்மனுவில், தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உள்ளனர். ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டிவி நிறு வனத்தின், தனியார் நிறுவனங்களிலும் ஒளிபரப்பு எடுத்து வாடிக் கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். கடந்த 4 ஆண்டு கால மாக அரசு கேபிள் டிவி நிறுவனம் புதிய செட்டாப் பாக்ஸ்கள் கொள்முதல் செய்யாமல் இருந்தது. ஆனால் வாடிக்கையாளர் களுக்கு ஒளிபரப்பு தடை ஏற்பட்டது. இதனால் தனியார் நிறுவனங் களிடம் செட்டாப் பாக்ஸ்களை வாங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆபரேட்டர்கள் வழங்கி வந்தனர். தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 2 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் கொள்முதல் செய்துள்ளது. செட்டாப் பாக்ஸ் தேவைப்படுகின்ற ஆபரேட்டர்கள், அரசு கேபிள் டிவி நிறுவனத்தி டம் 500 ரூபாய் செலுத்தி வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரு கிறோம். ஆனால், அரசு கேபிள் டிவி அதிகாரிகள், அனைத்து தனி யார் செட்டாப் பாக்ஸ்களையும் அகற்றிவிட்டு, அரசு செட்டாப் பாக்ஸ்களை மட்டும் பொருத்த வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்கின்றனர். இதனை ஏற்க மறுத்தால், புதியவர்களுக்கு ஒளிபரப்பு உரிமம் கொடுத்து தொழில் நெருக்கடியை உரு வாக்குகின்றனர். வாடிக்கையாளர்கள் ஏற்கனவே காசு கொடுத்து செட்டாப் பாக்ஸ் வாங்கும் நிலையில், அவற்றை மாற்ற சொல்வது சரியல்ல என கூறப்பட்டுள்ளது.
கச்சத்தீவு திருவிழா நிறைவு
இராமேஸ்வரம்: கச்சத்தீவு திருவிழாவையொட்டி விதிக்கப் பட்டிருந்த மீன்பிடி தடை நீக்கப்பட்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் திங்களன்று இராமேஸ்வரத்தில் மீன்பிடிக்கச் சென்றனர்.