tamilnadu

img

சிபிஎம் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளராக சி.சங்கர் தேர்வு

காஞ்சிபுரம், டிச.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட 23ஆவது மாநாடு டிசம்பர் 16,17 ஆகிய தேதிகளில் காஞ்சி மாநக ரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு கே.நேரு, எஸ். புவனேஸ்வரி, எல்.முருகேசன்  ஆகியோர் தலைமை தாங்கினர். மாநாட்டைத் துவக்கி வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் பேசினார்.  மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் வாழ்த்திப் பேசினார். மாநாட்டை நிறைவு செய்து மத்தி யக்குழு உறுப்பினர் அ.சவுந்தர ராசன் பேசினார்.  வரவேற்புக் குழு செயலாளர் டி.ஸ்ரீதர் நன்றி கூறினார். இம்மாநாட்டில் 21 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செய லாளராக சி.சங்கர்  தேர்ந்தெடுக் கப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக இ.முத்துக் குமார், கே.நேரு, பி.ரமேஷ், ஆர்.சௌந்தரி, ஆர்.மதுசூத னன், டி.ஸ்ரீதர் ஆகியோர் தேர்ந் தெடுக்கப்பட்டனர்..