சென்னை, மார்ச் 15 - பிஎஸ்என்எல் நிறுவனத்தை பொதுத்துறையாக பாதுகாக்க மார்ச் 28-29 தேதிகளில் நடை பெறும் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்போம் என்று பி.அபிமன்யு தெரிவித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சென்னை தொலை பேசி மாநில 8ஆவது மாநாடு செவ்வாயன்று (மார்ச் 15) சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பிஎஸ்என்எல்இயு அகில இந்திய பொதுச் செயலாளர் பி.அபிமன்யு பேசியதாவது: உலகமயக் கொள்கை அமல் படுத்தப்பட்டு 31 ஆண்டுகளில், பொதுத்துறை நிறுவனங்களின் 10 விழுக்காடு பங்குகளை மட்டுமே ஒன்றிய அரசால் விற்க முடிந்துள்ளது. தொழிலாளி வர்க்கம் போராடி பொதுத் துறை களை பாதுகாத்து வருகிறது. குறிப்பாக, பிஎஸ்என்எல் நிறு வனத்தின் ஒரு விழுக்காடு பங்கு களை கூட விற்க விடாமல் பாது காத்து வருகிறோம்.
ஊழியர்களை வஞ்சிக்கும் அரசு
பிஎஸ்என்எல் நிறுவனத்தை ஒன்றிய அரசு திட்டமிட்டு அழித்து வருகிறது. கட்டாய விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) திட்டத்தின் வாயிலாக 80 ஆயிரம் பேரை வெளியேற்றி, ஏராளமான பதவிகளை ஒழித்துள்ளது. பிஎஸ்என்எல் வளர்ச்சிக்கென்று 44 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இவை அனைத்தும் பிஎஸ்என் எல் நிறுவனத்தை தனி யாருக்கு கொடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை களாகும். ஊழியர்களுக்கு மாதந் தோறும் முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஒப்பந்த ஊழியர்களுக்கு 18 மாதங்களாக ஊதியம் வழங்க வில்லை. ஓய்வூ தியர்களுக்கு 2019 மார்ச் மாதம் முதல் மருத்துவ கட்டணத்தை திருப்பி செலுத்தாமல் உள்ள னர். இந்த நிலையில்தான் ஊழி யர்களின் ஊதிய மாற்ற பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது. அதுபல கட்டங்களை தாண்டி வர வேண்டி உள்ளது. இதற்கிடையில் ஊழியர்களின் பணி நேரத்தை 12 மணி நேரமாக மாற்ற முயற்சித்து வருகின்றனர். பலவீனப்படுத்தும் மோடி அரசு 4ஜி உரிமம் இல்லாத போதே, டிசம்பர் மாதம் 23 லட்சம், ஜனவரி மாதம் 25 லட்சம் புதிய செல்போன் சந்தாதாரர்களை பிஎஸ்என்எல் பெற்றுள்ளது. தனி யார் நிறுவனங்கள் 5ஜி சேவை நோக்கி செல்லும்போது, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவையை கூட அரசு தர மறுக்கிறது. பிஎஸ்என்எல் நிறு வனத்தை பலவீனப்படுத்தும் அனைத்துப்பணிகளையும் ஒன்றிய அரசு செய்து வருகிறது.
தனியாருக்கு குத்தகை
தனியார்மயத்தை தேசிய பண மயமாக்கல் திட்டம் என்ற பெயரில் ஒன்றிய அரசு செயல்படுத்துகிறது. உதாரணத்திற்கு பிஎஸ்என்எல் நிறு வனத்தின் 60 ஆயிரம் டவர்களில், 14917 டவர்களை தனியாருக்கு குத்த கையாக கொடுக்க உள்ளது இதற்கான பணத்தை அரசு வாங்கிக் கொள்ளும். அந்த டவர் களை பிஎஸ்என்எல் பயன்படுத்த தனியாருக்கு கட்டணம் செலுத்த வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் 7 லட்சம் கிலொ மீட்டர் ஆப்டிக் பைபர் கேபிள் கட்டமைப்பு உள்ளது. இதில் பாதியளவு கூட ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தனி யார் நிறுவனங்களிடம் இல்லை. பாரத் நெட் திட்டத்தில் 2.50லட்சம் கிலோ மீட்டர் ஆப்டிக் பைபர் கேபிள் கட்டமைப்பு உள்ளது. இவற்றையும் தனியாரிடம் கொடுக்க உள்ளனர். இந்தச் சூழலில் பொதுத் துறைகளை பாது காக்க வலியுறுத்தி மார்ச் 28-29 தேதிகளில் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்போம்; பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாது காப்போம். மீண்டும் பிஎஸ்என்எல் இயு சங்கத்தை சென்னை தொலை பேசியில் மீண்டும் முதன்மையான இடத்திற்கு கொண்டுவருவோம். இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில செயல் தலைவர் எம்.சங்கர் தலைமை தாங்கினார். சென்னை தொலைபேசி தலைமை பொதுமேலாளர் முனைவர் வி.கே.சஞ்ஜீவி, பிஎஸ்என்எல்இயு துணைப்பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா, சென்னை மாநிலச் செயலாளர் எம்.ஸ்ரீதர சுப்ரமணியன், பொருளாளர் எஸ்.ஹேமாவதி, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஏ.பாபு ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.
நிர்வாகிகள்
பிஎஸ்என்எல்இயு சென்னை தொலைபேசி தலைவராக எஸ்.பாஷா, மாநிலச் செயலாளராக எம்.ஸ்ரீதர சுப்ரமணியன், பொரு ளாளராக எஸ்.ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.