நாகப்பட்டினம், டிச.25- உழைப்பாளி மக்களின் ஒப்பற்ற தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.தனுஷ்கோடி அவர் களின் துணைவியார் பி.எஸ். டி.மனோன்மணி அம்மை யார் 25.12.2021 காலை10.30 மணி அளவில் இயற்கை எய் தினார். அடிமை விலங்கு ஒடித்து ஆர்த்தெழுந்த தோழர் பி.எஸ்.தனுஷ்கோடியின் மனைவி மனோன்மணி இறந்த செய்தி அறிந்தவுடன் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், நாகை மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து, கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் நாகை மாலி, மாநில குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன்,தஞ்சை சிபிஎம் மாவட்டச் செயலா ளர் சின்னை பாண்டியன், திரு வாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசி யக் குழு உறுப்பினர் கோ. பழனிச்சாமி, நாகை நாடாளு மன்ற உறுப்பினர் எம்.செல்வ ராசு, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ௧.மாரிமுத்து உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள். மறைந்த மனோன்மணி அவர்கள் மாதர் சங்கத்தில் செயல்பட்டார். ஊராட்சி வார்டு உறுப்பினராக பணி யாற்றியிருக்கிறார். மார்க் சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் கோ. வீரையன் மற் றும் இயக்கத்தின் முன்னோடி தோழர்களோடு நன்கு அறி யப்பட்டு இயக்கம் சார்ந்த வளர்ச்சிக்கு முக்கிய பங் காற்றி இருக்கிறார்.
வி.தொ.ச மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங் கம், மாநில பொருளாளர் எஸ்.சங்கர், திருவாரூர் மாவட்டத் தலைவர் எம்.கலைமணி, மாவட்டச் செய லாளர் ஆர்.குமாரராஜா, மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த மனோன்மணி அம்மையா ருக்கு பிஎஸ்டி புருசோத்த மன், அசோகன் எனும் இரு மகன்களும், சுசீலா எனும் மகளும் உள்ளனர். அவரது இறுதி நிகழ்ச்சி ஞாயிறு காலை 26 .12 .2021 காலை 11 மணியளவில் தலைஞாயிறு ஒன்றியம் பாங்கல் ஊராட்சி அவர்களது இல்லத்தில் இருந்து புறப்பட்டு நல்ல டக்கம் செய்யப்படும்.