பாஜக ஆளும் தில்லியில் கொடூரம் மருத்துவ மாணவியை ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்
புதுதில்லி தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் பெண்களுக்கு எதிரான வன்முறை மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைப் போன்று, தில்லியும் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லா மாநிலமாக மாறியுள்ளது. இந்நிலையில், தில்லியின் ஆதர்ஷ் நகரில் ஒரு விடுதியில் மருத்துவ மாணவியை ஒரு மாதமாக தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹரியானா வின் ஜிந்த் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஆதர்ஷ் நகரில் உள்ள விடுதியில் தங்கி அருகில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் பயின்று வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் 20 வயது இளைஞர் ஒருவர் செப்டம்பர் 9 ஆம் தேதி தெருவில் உள்ள அனைவருக்கும் விருந்து வைப்பதாக கூறி ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது குளிர்பானத்தில் போதைப்பொருளை கலந்து கொடுத்து மருத்துவ மாணவியை சுயநினைவை இழக்க செய்து அந்த இளைஞர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து அவரது நண்பர்கள் 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர். செப்டம்பர் 9 ஆம் தேதி நடந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்த இளைஞர்கள் 3 பேரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி, செப்டம்பர் மாதம் முழுவதும் பலமுறை அந்த பெண்ணை கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஒரு மாதமாக நரகத்தைத் தாங்கிய பிறகு, அந்த இளம் பெண் இறுதியாக தைரியத்தை வரவழைத்து தனது குடும்ப உறுப்பினர்களிடம் இந்தக் கொடுமையை கூறினார். கடந்த அக்., 2ஆம் தேதி பாதிக்கப் பட்ட பெண் காவல்நிலை யத்தில் புகார் அளித்தார். பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பிறகு கடந்த வெள்ளிக்கிழமை மூன்று இளைஞர்கள் மீதும் காவல்துறை பாலியல் வன்கொ டுமை வழக்குப் பதிவு செய்த னர். தற்போது தலைமறைவாக உள்ள அவர்களைக் கைது செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
