காதல் திருமணம் செய்த தம்பதி மீது கொடூரத் தாக்குதல்
பெண் கடத்தல்; இளைஞர் மருத்துவமனையில் அனுமதி
சேலம், செப்.9 - ஓமலூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்திற்கு சென்ற தம்பதியினரை தடுத்து நிறுத்திய பெண் வீட்டார், இளைஞர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தி பெண்ணை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே உள்ள சந்திரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச் செல்வன் (32). சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வரும் இவரும், சேலம் மாவட்டம், காடை யாம்பட்டி அருகே வடகம்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகள் பிரியராகினி (23) ஆகி யோர் 5 ஆண்டாக காதலித்து வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு பிரியராகினி யின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த செப்.4 ஆம் தேதியன்று இரு வரும் வீட்டை விட்டு வெளியேறி, கிருஷ்ணகிரியி லுள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், பெண் வீட்டாரிடம் இருந்து அச்சுறுத்தல் எழுந்த நிலையில், பாது காப்பு கேட்டு சேலம் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்திற்கு காதல் தம்பதியினர் காரில் புறப்பட்டனர். ஓமலூர் சுங்கச்சாவடி அருகே வந்தபோது, அவர்களை பிடிப்பதற்காக பெண்ணின் உறவி னர்கள் தயாராக உள்ளதையறிந்து, கோட்டகவுண் டம்பட்டி கிராம சாலை வழியாக சென்றனர். ஆனால், அங்கே காரில் காத்திருந்த ஒரு கும்பல், காதல் தம்பதியைப் பார்த்ததும் விரட்டிச் சென்ற னர். மண் சாலையில் சென்ற கார் நடுவழியில் நின்று விட்டதால், காரிலிருந்து இறங்கி காதல் தம்பதி யினர் தப்பிக்க முயன்றனர். இருப்பினும் அவர்களை துரத்திச்சென்று மடக்கிப் பிடித்த கும்பல், சரமாரியாக தாக்கினர். இதில் கலைச்செல் வனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். இதன்பின் பிரியராகினி கழுத்திலிருந்த தாலியை அறுத்து எறிந்த கும்பல், அவரை கடத்திச் சென்றது. இச்சம்பவத்தை கண்ட அப்பகுதி பொது மக்கள், கலைச்செல்வனை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், ஓமலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.